மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் பாவனா

Published On:

| By admin

சின்னத்திரை தொகுப்பாளராக இருந்த பாவனா, மிஷ்கின் இயக்குநராக அறிமுகமான சித்திரம் பேசுதடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன்பிறகு இங்கு சில படங்களில் நடித்தவர், மலையாள, கன்னட மொழிகளில் அதிக படங்களில் நடித்தார். 2017ம் ஆண்டு வெளிவந்த ‘ஆதம் ஜான்’ என்ற மலையாளப் படத்தில் பிருத்விராஜுடன் நடித்திருந்தார். அதுதான் அவர் கடைசியாக நடித்து வெளியான மலையாள படம்.
அதன்பிறகு சில கன்னட படங்களில் நடித்து வந்த பாவனா வாழ்க்கையில் ஏற்பட்ட சில சம்பவங்கள் காரணமாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

இந்நிலையில், ஐந்து வருடங்களுக்குப் பிறகு ‘என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அறிமுக இயக்குநர் மைமூநாத் அஷ்ரப் இயக்கும் இந்தப் படத்தில் ஷராபுதீன், அனார்க்கலி நாசர், அர்ஜுன் அசோகன், செபின் பென்சன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூரில் ஜூன் 23 அன்று தொடங்கியது. படப்பிடிப்புக்கு வந்த பாவனாவை படப்பிடிப்பு குழுவினர் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர். இதுதவிர மலையாள திரையுலகினர் பலரும் பாவனாவுக்கு வாழத்து தெரிவித்து வருகிறார்கள்.

**-இராமானுஜம்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share