லோயர் கேம்பில் பவதாரிணி உடல்!

Published On:

| By Monisha

bavatharini funeral

உடல்நலக்குறைவால் உயிரிழந்த பின்னணி பாடகி பவதாரிணியின் உடல் தேனி மாவட்டத்தில் உள்ள லோயர் கேம்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாக கல்லீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன் தினம் (ஜனவரி 25) இலங்கையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து நேற்று மாலை இலங்கையில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட பவதாரிணி உடல் தி.நகர் முருகேசன் சாலையில் உள்ள இளையராஜாவின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அங்கு ஏராளமான பொதுமக்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் திரண்டு வந்து கண்ணீர் மல்க பவதாரிணிக்கு தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.

தொடர்ந்து பவதாரிணியின் உடல் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது தேனியில் லோயர் கேம்பில் உள்ள இளையராஜாவின் பண்ணை வீட்டில் பவதாரிணி உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பவதாரிணியின் உடலை கண்ட உறவினர்கள் கதறி அழுதனர்.

தொடர்ந்து இளையராஜாவின் தாயார் சின்னதாய் மற்றும் மனைவி ஜீவாவின் நினைவிடத்திற்கு அருகில் பவதாரிணி உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

பாபி தியோலின் டெரர் லுக்… வைரலாகும் கங்குவா போஸ்டர்!

தளபதி 7௦: லாக் செய்த பிரபல நிறுவனம்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share