இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 21

Published On:

| By Balaji

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 21

வழக்கறிஞர்களுக்கான நலத் திட்டங்கள்!

வழக்கறிஞர்களுக்கான நலத் திட்டங்களில் முக்கியமானதான, குரூப் இன்ஷூரன்ஸ் திட்டம் ஒன்றை தனது முயற்சியால் தமிழ்நாட்டு வழக்கறிஞர்களுக்குக் கொண்டுவந்தவர் மூத்த வழக்கறிஞரான முன்னாள் பார் கவுன்சில் தலைவர் ஆர்.கே.சந்திரமோகன்.

ஏனெனில், எத்தனையோ வழக்கறிஞர்கள் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளுக்கு எதிராக வழக்குத் தொடுத்து தங்களது க்ளையண்ட்டுகளுக்காக அந்த காப்பீட்டுத் தொகையை நீதிமன்றத்தில் வாதாடிப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால், பல குடும்பங்களைக் காப்பாற்றிய வழக்கறிஞர்களின் குடும்பம் அவர்களின் அகால மரணத்துக்குப் பின், திடீர் பிரிவுக்குப் பின் திண்டாடுகிற நிலையைக் கண்ணெதிரே கண்டு நெஞ்சு பொறுக்காமல்தான் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தார் ஆர்.கே. சந்திரமோகன்.

அதற்கும் முதலில் பார் கவுன்சில் நிர்வாகமோ, மூத்த வழக்கறிஞர்களோ ஆதரிக்கவில்லை என்பதும், தனது மூளைக் குழந்தையான இந்த குரூப் இன்ஷூரன்ஸ் திட்டத்தை போராடியே அவர் நடைமுறைக்குக் கொண்டுவந்தார் என்பதையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஆர்.கே. சந்திரமோகன்.

அதிலும் முக்கியமாக, ‘இன்ஷூரன்ஸ் என்றால் சாலை விபத்துக்கு மட்டுமல்ல; நாங்கள் காப்பீட்டு நிறுவனங்களை அழைத்து இதுபற்றிப் பேசி விபத்துக்கு ஒரு புதிய வரையறையையே உண்டாக்கினோம்’ என்று குறிப்பிட்டார் அவர்.

**விபத்துக்கு என்ன புதிய வரையறை?**

இனி சந்திரமோகனே விளக்குகிறார்.

“விபத்து என்றால் சாலை விபத்து அல்லது வாகன விபத்து மட்டுமல்ல… மரத்தில் இருந்து விழுந்து இறந்தாலும், பாம்பு கடித்து இறந்தாலும், நாய் கடித்து இறந்தாலும், ஒரு கலவரத்தில் அல்லது மோதலில் எதிர்பாராதவிதமாகக் கொல்லப்பட்டாலும் அது விபத்துதான். அதாவது, இயற்கை மரணம் அல்லாமல் வேறு எந்த வகையில் மரணம் ஏற்பட்டாலும் அது விபத்துதான். ஏனெனில் யாரும் போய் வேண்டுமென்றே விரும்பி சாக முடியாது என்று ஒரு வரையறையை நாங்கள் உருவாக்கினோம். இது காப்பீட்டு வரலாற்றிலேயே ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்று சொல்லலாம்.

இந்த வரையறையின்படி தமிழகத்தில் இருக்கும் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் காப்பீடு செய்யப்பட்டது. இரண்டு வருடம் வரை இதற்கு பிரிமீயம் என்பது 150 ரூபாய்தான். காப்பீட்டுத் தொகை என்பது மூன்று லட்ச ரூபாய். இதனால் பல வழக்கறிஞர்களின் குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. இப்போது பிரிமீயம் தொகை 650 ரூபாய் ஆகியுள்ளது.

நான் பார் கவுன்சில் உறுப்பினராக இருந்தபோது இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தேன் என்பதில் எனக்கு ஒரு மன நிறைவு. அதேபோல நான் பார் கவுன்சில் சேர்மன் ஆனபிறகு இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தை மூன்று லட்சம் ரூபாயில் இருந்து ஐந்து லட்ச ரூபாயாக உயர்த்தினேன்.

வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களின் மனைவி, குழந்தைகள் ஆகியோருக்கும் காப்பீட்டுத் திட்டத்தை நான் பார் கவுன்சில் சேர்மன் ஆக இருக்கும்போது கொண்டு வந்தேன்.”

Bar Council of India and Lawyers Mini Series 21

**வேறு என்ன நலத்திட்டங்களை செய்திருக்கிறீர்கள்?**

“இந்த காப்பீட்டுத் திட்டம் போன்றே வழக்கறிஞர்கள் மத்தியில் என் காலத்தில் கொண்டுவரப்பட்ட இன்னொரு திட்டமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. அது என்னவென்றால்… பொதுவாக வழக்கறிஞர்கள் மதிப்பு மிகுந்த தொகைகளைத் தங்கள் தொழில் நிமித்தமாக, நீதிமன்ற அலுவல் நிமித்தமாக கையாள வேண்டியிருக்கும்.

வழக்கு நடத்தும்போது கோர்ட் ஸ்டாம்புக்கும், கட்டணத்துக்கும் வழக்கறிஞர்கள் பணத்தை எடுத்துச் செல்வார்கள். வழக்கு தொடர்பான அபராதப் பணத்தையும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வார்கள். வழக்கு தொடர்பான ரெகவரி நடவடிக்கைகளுக்கான சில பெரிய தொகையை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வார்கள். அப்படி எடுத்துச் செல்லப்படும்போது திருடப்படவோ, காணாமல் போகவோ நேரிடும்போது வழக்கறிஞர்களுக்கு அது பெரும் மன உளைச்சலையும், தொழில் பாதிப்பையும் ஏற்படுத்தும். இதை மனதில்கொண்டு இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஏற்படும் கொள்ளைகளை உறுதிப்படுத்தினால், ஒரு லட்சம் வரையில் திரும்பக் கிடைக்கும் வகையிலான காப்பீட்டுத் திட்டத்தையும் கொண்டுவந்தோம்.

இதுபோன்ற திட்டங்களால் ஒவ்வொரு வருடமும் வழக்கறிஞர்கள் கட்டும் பிரிமீயத்தைவிட 200% அதிகமாக வழக்கறிஞர்களுக்கு காப்பீட்டுத் தொகை திரும்பக் கிடைத்தது. இன்ஷூரன்ஸ் நிறுவனங்களே, ‘சார் இந்தத் திட்டத்தால் எங்களுக்கு நட்டம்தான். இருந்தாலும் வழக்கறிஞர்களின் நலனுக்காக நீங்கள் எடுத்துக் கொள்ளும் அக்கறையைப் பாராட்டும் விதமாக இந்தத் திட்டத்தைத் தொடர்கிறோம்’ என்று கூறினார்கள்.

இதுபோல வழக்கறிஞர்களுக்கு என்று பல நலத் திட்டங்களுக்காக அரசையும் வலியுறுத்தினோம்.

இன்று நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர்களாக இருக்கக் கூடாது என்று இந்திய பார் கவுன்சிலுக்கு முறையீடுகள் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால், நான் பார் கவுன்சில் தலைவராக இருந்தபோதுதான் நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் உறுப்பினர்களாக இருக்கும் வழக்கறிஞர்களின் கூட்டத்தை ஒருங்கே ஏற்பாடு செய்தோம்” என்றார்.

எதற்காக இந்தக் கூட்டம்?

மூத்த வழக்கறிஞர் ஆர்.கே.சந்திரமோகனிடமே தொடர்ந்து பேசுவோம்.

(விளக்கு ஒளிரும்)

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 1

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 2

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 3

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 4

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 5

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 6

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 7

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 8

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 9

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 10

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 11

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 12

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 13

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 14

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 15

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 16

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 17

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 18

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 19

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 20

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share