சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலி பாறை ஓடை உள்ளிட்ட ஓடைகளில் தொடர் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோயில் உள்ளது. இந்த மாதம் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று (நவம்பர் 10) முதல் 14ஆம் தேதி வரை சதுரகிரி கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலி பாறை ஓடை உள்ளிட்ட ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலை ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?
டாப் 10 செய்திகள்…. இதை மிஸ் பண்ணாதீங்க!