சென்னை : பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை!

Published On:

| By Kavi

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவரும் வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூரில் இன்று (ஜூலை 5) இரவு 9.30 மணியளவில் வீட்டருகே நின்று கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் வெட்டியுள்ளனர்.  உயிருக்கு அஞ்சி தப்பிக்க முயன்ற போது ஆம்ஸ்ட்ராங்கை மர்ம கும்பல் ஓட ஓட வெட்டியுள்ளது.

இதில் ஆபத்தான நிலையில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிவிட்டு தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“ஆகஸ்ட் மாதத்திற்குள் என்டிஏ ஆட்சி கவிழும்” – அடித்து சொல்லும் லாலு பிரசாத்

நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share