டிரெண்டாகும் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் திருமண புகைப்படங்கள்!

Published On:

| By Monisha

நடிகர் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அசோக் செல்வன். ’சூது கவ்வும்’ படத்தில் நடிக்க தொடங்கிய அசோக் செல்வன் ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் பிரபலமானார். தொடர்ந்து நித்தம் ஒரு வானம், போர் தொழில் ஆகிய படங்கள் அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் அருண்பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் தும்பா, அன்பிற்கினியாள் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். அசோக் செல்வன் மற்றுக் கீர்த்தி பாண்டியன் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சை கொடி காட்டிய நிலையில் சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரியில் திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பின்னர் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் தம்பதியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

மோனிஷா

நாளை டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

மீண்டும் 44 ஆயிரத்துக்கு கீழ் சென்ற தங்கம் விலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share