உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்னும் பழமொழியை கூறி, சாப்பிடும் எல்லா உணவுகளிலும் உப்பைச் சேர்த்துவிடுகிறோம். உடலில் உப்பின் அளவு கொஞ்சம் அதிகரித்தாலும் பிரச்சினைதான். நம் உடலில் உப்பின் அளவு கூடுவதாலும் குறைவதாலும் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன. உப்பு அதிகமாக சாப்பிட்டால் இதய நோய் தாக்கலாம். ஹைபர்டென்ஷன், பிரஷ்ஷர் போன்றவை தாறுமாறாக எகிறும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
ICMR-National Institute of Nutrition’s “Dietary Guidelines for Indians- 2024” என்ற அமைப்பு இந்தியர்கள் நாள் ஒன்றுக்கு எவ்வளவு உப்பு சாப்பிட்டால் உடல் நலனை பாதுகாத்துக் கொள்ள முடியுமென்ற வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியர்கள் நாள் ஒன்றுக்கு 2300 மில்லிகிராம் சோடியம் எடுத்துக் கொள்ளலாம். அப்படியென்றால் நாள் ஒன்றுக்கு 5 கிராம் உப்புக்கு மேல் இந்தியர்கள் சாப்பிடக் கூடாது.
ஆனால், இந்தியர்கள் 3 கிராம் முதல் 10 கிராம் வரை உப்பு தினசரி எடுத்துக் கொள்கிறார். 45 சதவிகித இந்தியர்கள் 5 கிராமுக்கு மேல் உப்பு சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சராசரியாக இந்தியர்கள் நாள் ஒன்றுக்கு 11 கிராம் உப்பு எடுத்துக் கொள்வதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகிறது.
அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் எல்லாவற்றிலுமே இயற்கையான உப்பு வகையில் ஒன்றான சோடியம் குளோரைடு கலந்திருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு உப்பை அளவாக பயன்படுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். அரிசி, சப்பாத்தி, பரோட்டோ, பூரி போன்றவற்றை சமைக்கும் போது, உப்பு கண்டிப்பாக சேர்க்கக் கூடாது என்கிறார்கள். அதே போல், நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் குடித்தால் உடலில் உள்ள டாக்சிக் வெளியேற்றப்படுவதோடு, சோடியத்தின் அளவும் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவாதிரை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மிருகசீரிஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)