புதிய தொடக்கம்… ஓய்வுபெற்ற ஐஆர்எஸ் அருண் ராஜ் சொன்ன அந்த விஷயம்!

Published On:

| By Selvam

பீகார் மாநிலத்தில் வருமான வரித்துறை கூடுதல் ஆணையராகப் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த அருண்ராஜ் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார். அவருக்கு முக்கிய பதவி கொடுப்பதில் தவெக தலைவர் விஜய் தீவிர ஆலோசனையில் உள்ளார். Arun Raj says new beginning in x platform

இந்தநிலையில், ‘புதிய தொடக்கம்’ என்ற தலைப்பில் அருண்ராஜ் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “இன்று எனது அரசு பணியை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துவிட்டேன். கொஞ்சம் உணர்ச்சிவசமாக இருக்கிறது.

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவ அதிகாரியாக ஐந்தரை ஆண்டுகள், பின்னர் ஐஆர்எஸ்ஸில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் என 20 ஆண்டுகளுக்கும் மேலான அரசு சேவையின் அற்புதமான பயணம் இது.

கடவுள் எனக்கு மிகவும் கருணை காட்டினார், சில நல்ல வேலைகளைச் செய்ய வாய்ப்புகளை வழங்கினார், அதை நான் என்றென்றும் என் இதயத்திற்கு மிக நெருக்கமாக உணர்கிறேன்.

ADVERTISEMENT

எனது சக ஊழியர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களின் வழிகாட்டுதல், ஊக்கம் மற்றும் ஆதரவுக்கு நான் நன்றி கூறுகிறேன்.

என்னை இப்போது இருக்கும் இந்த நிலைக்குக் கொண்டு வந்த என் தாயின் பாதங்களில் தலை வணங்குகிறேன், மேலும் என் துணையாக நின்ற என் மனைவிக்கும் நன்றி கூறுகிறேன்.

ADVERTISEMENT

என் வாழ்க்கையின் நோக்கத்தைத் தொடர மிகுந்த திருப்தியுடனும், இனிமையான நினைவுகளுடனும் நான் ஐஆர்எஸ் பணியை விட்டு வெளியேறுகிறேன். அனைவரின் ஆசீர்வாதங்களையும், வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் நாடுகிறேன். இன்னும் செல்ல வேண்டிய தூரம் வெகு தொலைவாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார். Arun Raj says new beginning in x platform

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share