கலை அறிவியல் கல்லூரிகளில் பாடத்திட்டம் மாற்றம்: பொன்முடி

Published On:

| By Monisha

கலை அறிவியல் கல்லூரிகளில் விரைவில் பாடத்திட்டம் மாற்றப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேட்டியளித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் மண்டல மாநாடு இன்று (செப்டம்பர் 12) நடைபெற்றது.

இந்த மாநாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 68 பொறியியல் கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு அமைச்சர் பொன்முடி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்,

”நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டத்தை நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் பயிற்றுவிப்பது தொடர்பாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களின் சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் துவக்க விழா நடைபெற்றது.

பொறியியல் பாடத்திட்டம் போல் கலை, அறிவியல் கல்லூரி பாடத்திட்டமும் மாற்றப்படும். பொறியியல் முதலாமாண்டு, 2ம் ஆண்டுக்குப் பாடத்திட்டம் மாற்றப்பட்டது போல் 3ம் ஆண்டுக்கும் புதிய பாடத்திட்டம் வரும்.

முன்பு இருந்த பாடத்திட்டத்திற்குப் பதில் தற்போதைய காலத்திற்கு ஏற்ப பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும்” என்று கூறினார்.

மோனிஷா

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு, தேதி அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share