உலகம் முழுவதும் கடந்த 2 மணி நேரமாக முடங்கிய வாட்ஸ் அப் செயலி தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியை உலகம் முழுவதும் 200 கோடி பயனர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
நம்முடைய அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமான வாட்ஸ்அப் மூலம் நாள்தோறும் அதன்மூலம் 10,000 கோடி குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த 2 மணி நேரமாக உலகின் பல நாடுகளிலும் வாட்ஸ்அப் செயலியின் பயன்பாடு முடங்கியதால் பயனர்கள் அவதியடைந்தனர். செயலியில் தகவல்களை அனுப்புவதிலும், பெறுவதிலும் சிக்கல் நிலவி வந்தது.
இதனைத் தொடர்ந்து ட்விட்டர், டெலிகிராம் போன்ற மற்ற சமூகவலைதளங்களில் தங்களது குறையை கூறி மீம்ஸ்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் செயலி மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இதனையடுத்து தகவல்களை அனுப்ப முடியாமல் சிரமப்பட்ட பயனர்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
இந்தியா முழுவதும் வாட்ஸப் சேவை முடக்கம்!
இங்கிலாந்து மன்னரையே மலைக்கவைக்கும் ரிஷி சுனக்கின் சொத்து மதிப்பு!