எஞ்சாமியா, உஞ்சாமியா? அறிவுக்கு சந்தோஷ் நாராயணன் பதில்!

Published On:

| By Jegadeesh

கடந்த ஜூலை 28ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பாடலாசிரியர் அறிவு எழுதி, சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடல் அனைவரது முன்னிலையிலும் பாடப்பட்டது.

இதில் அறிவு புறக்கணிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அது தொடர்பாக அறிவு விளக்கம் அளித்தார். இந்நிலையில் இதுகுறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “நான் இப்போது வேறு மொழியில் ‘indie’ இசையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இதில்தான் என் முழு கவனத்தையும் நேரத்தையும் செலவிடுகிறேன்.

என்ஜாயி என்ஜாமி பாடலுடனான எனது பயணத்தைப் பற்றிக் கூற விரும்புகிறேன்.

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், நமது வரலாற்றையும் இயற்கையும் கொண்டாடும் விதமாக தமிழில் ஒரு பாடல் பண்ண வேண்டும் என்று எனது மகள் தீ என்னிடம் கூறினார். அதன் பிறகு நான் என்ஜாயி என்ஜாமி' பாடலை கம்போஸ், புரோகிராம் மற்றும் ரெக்கார்டிங் செய்து இணைந்து பாடினேன்.

மேலே கூறப்பட்ட என்னுடைய பணியானது உலகளவில் தயாரிப்பாளர்’ என்று குறிப்பிடப்படுகிறது. இதை independent space ல் பலர் ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள்.
நான், தீ அறிவு எங்களுக்குள் ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் நிறைந்த அன்பிற்காகவும், independent music மேல் எங்களுக்கு உள்ள காதலாலும் ஒன்றாக இணைந்தோம்.

தீ மற்றும் அறிவு பாடலைப் பாட ஒப்புக்கொண்ட நிலையில், இருவரும் சேர்ந்து பாடலுக்காக பணியாற்றினார்கள். தீ யின் பல வரிகளுக்கு அவரே இசையமைத்தார். அறிவு பாடல்கள் எழுத ஒப்புக்கொண்டார். நான் மீதி இசையையும், அறிவு பகுதிக்கான ட்யூனையும் கம்போஸ் செய்தேன்.

இந்தப் பாடலுக்கான அடித்தளத்தை மிக நுட்பமாகத் தேர்ந்தெடுத்து, பாடலுக்கான ஓட்டத்தையும், திரைக்கதையையும் உருவாக்கி, பல நிஜ வாழ்க்கைக் கதைகளைக் கூறி அறிவுடன் பல மணி நேரம் செலவழித்த இயக்குநர் மணிகண்டனுக்கு (காக்கா முட்டை, கடைசி விவசாயி) எங்கள் குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது அற்புதமான திரைப்படமான கடைசி விவசாயி’ தான் இந்தப் பாடலுக்கு இன்ஸ்பிரேசன்.

பாடலில் உள்ள ஒப்பாரி வரிகள் அரக்கோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பாட்டிகள் மற்றும் தாத்தாக்களின் பங்களிப்பாகும். அவர்களின் பணியை கௌரவித்த அறிவுக்கு நன்றி. பந்தலுல பாவக்கா பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாரம்பரிய ஒப்பாரி பாடல்களில் ஒன்று.ரகிட ரகிட, அம்மா நானா, என்னடி மாயாவி போன்ற எனது பல பாடல்களைப் போலவே, நான் இசையமைக்கும் பாடலில் நானே சில வார்த்தைகளைப் பயன்படுத்துவேன். அவற்றில் ‘என்ஜாயி என்ஜாமி’யும் ஒன்றாகும்.

என்னுடைய இந்த பொருத்தமற்ற சொற்றொடரைச் சுற்றி அறிவு ஒரு அற்புதமான வரிகளை உருவாக்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இப்பாடலின் முழு உருவாக்கம் 30 மணி நேரத்திற்குள் செய்யப்பட்டது. படப்பிடிப்பிற்கு முன்பு என்ஜாயி என்ஜாமியை பதிவு செய்ய சில மணிநேரங்களே இருந்ததால், எங்களின் பணி வேகமாகவும், வேடிக்கையாகவும் தன்னிச்சையாகவும் இருந்தது.

இந்தப் பாடலின் அனைத்து வருமானமும், உரிமைகளும் தீ, அறிவு மற்றும் நானும் சமமாகப் பகிர்ந்து கொண்டோம் அதில் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க விரும்புகிறேன். தீ , அறிவு இருவருக்கும் பக்கபலமாக நின்று எனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தளங்களிலும் எந்தவொரு பாரபட்சமின்றியும் வரவு வைத்துள்ளேன். என்ஜாயி எஞ்சாமி ஆடியோ வெளியீட்டு விழாவில் அறிவு பற்றிய எனது பேச்சு அதற்கு சாட்சி.

செஸ் ஒலிம்பியாட் 2022 இல் தீ மற்றும் கிடாக்குழி மாரியம்மாளின் என்ஜாயி என்ஜாமி நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, அறிவு வெளிநாட்டில் இருந்ததால் அவரால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. மேலும் அவரது தற்போதைய அமெரிக்க பயணத்திட்டம் காரணமாக அவர் கலந்து கொள்ள முடியாது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்தார்.அறிவு ஒரு அற்புதமான கலைஞன் என்பதை நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்.

அறிவின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்திருக்கும் ‘அனல் மேலே பனித்துளி’ திரைப்படத்தில் நான் இசையமைத்து விரைவில் வெளிவரவிருக்கும் “கீச்சே கீச்சே” பாடல் ‘என்ஜாய் என்ஜாமி’ படத்திற்கு கொடுத்த அதே அன்பை ‘கீச்சே கீச்சே’ படத்திற்கும் கொடுத்தால் அது கலைஞனாக அறிவுக்கு பொருத்தமாக இருக்கும்.


ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதற்காக எனது தளத்தை நான் எப்போதும் பயன்படுத்தியிருக்கிறேன், எனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கலை இரண்டுமே அதற்குச் சான்றாகும். எனது வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் நாங்கள் பின்பற்றும் பணி நெறிமுறை, கலாசாரம் மற்றும் தோழமை ஆகியவை அவருக்கும் எனக்குமான பகிரங்கமான ரகசியம்.

கலையின் மீதும், நம் நாட்டில் உள்ள அனைத்து அற்புதமான கலைஞர்களின் மீதும் மட்டுமே அன்பு கொண்டிருங்கள், வரும் மாதங்களில் உலகளவில் பல புதிய தமிழ்க் குரல்களின் எழுச்சியைக் காண்போம்.

இந்த பாடல் உதவியாக இருந்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. இந்த சிறப்பு பாடலில் ஈடுபட்டுள்ள எவருடனும் பொது அல்லது தனிப்பட்ட விவாதத்திற்கு நான் முற்றிலும் தயாராக இருக்கிறேன். மேலும் கலைகளை உருவாக்கி மக்களை ஒன்றிணைப்பதே எனது குறிக்கோள்” என்று தெரிவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

அந்தரங்கம்… டேட்டிங்… : வரம்பு மீறுகிறாரா கரண் ஜோகர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel