தெலங்கானாவில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தொடங்கிய ராகுல் காந்தி 57ஆவது நாளாக இன்று தெலங்கானா மாநிலம் சங்கராரெட்டி மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
19 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 7 நாடாளுமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது ராகுல்காந்தியின் தெலங்கானா பயண திட்டம். அந்த மாநிலத்தில் மட்டும் 375கிமீ கடக்கும் ராகுல் காந்தி வரும் நவம்பர் 7ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்துக்குள் நுழைகிறார்.
ராகுலின் நடைப்பயணத்தில் பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
அந்தவகையில் இன்று ராகுல் காந்தி தன்னை சாட்டையால் அடித்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலங்கானாவில் காளி தேவிக்காகக் கொண்டாடப்படும் பண்டிகை பொனாலு. இந்த பண்டிகையின் போது காளியின் சகோதரர் போதுராஜூ அவதாரமாக வேடமணிந்து சாட்டையை அடித்துக்கொண்டு ஊர்வலமாகச் செல்வர்.
அந்தவகையில் பொனாலு பண்டிகையில் கலந்துகொண்ட ராகுல் காந்தி அங்கிருந்தவர்களிடம் சாட்டையை வாங்கி தன்னைத் தானே அடித்துக்கொண்டார்.
ஒவ்வொரு பகுதியிலும் நடைப்பயணம் மேற்கொள்ளும் போதும், அந்தந்த பகுதி மக்களின் வாழ்வியல் மற்றும் கலாச்சாரத்தைத் தெரிந்துகொண்டு, அதனைப் பின்பற்றி வருகிறார் ராகுல்காந்தி. அந்தவகையில் தான் இன்று பொனாலு பண்டிகையை ஒட்டி சாட்டையால் அடித்துக் கொண்டுள்ளார்.
பிரியா
நகர சபையா? திமுகவின் நாடக சபையா?: மநீம கேள்வி!
குஜராத் சட்டமன்றத் தேர்தல் அட்டவணை!