‘கறுப்புதான் அழகு’ என்று தேற்றிக்கொண்டாலும் நல்ல நிறமுடையவர்களைப் பார்த்தால் கறுப்பாக இருப்பவர்களுக்கு சற்று பொறாமையாகத்தான் இருக்கும். அப்படி இருப்பவர்கள் தங்களுடைய நிறத்தை மெருகேற்றிக்கொள்ள செயற்கை ரசாயனங்கள் நிறைந்த க்ரீம்கள் என பல வழிகளைக் கையாளுகின்றனர். ஆனால், சருமத்தின் நிறத்தைக் கூட்டுவதற்கும் முகம் பொலிவடைவதற்கும் இயற்கை வழிமுறைகள் பல உள்ளன. அவற்றில் சில இதோ…
கடலை மாவுடன் மஞ்சள் சேர்த்து சருமம் முழுவதும் தேய்த்து குளித்துவர பொலிவு கூடும். இத்துடன் சிறிது தயிரும் சேர்த்துக்கொள்ளலாம்.
அரிசி மாவுடன் டீத்தூளின் சிறிது டிக்காஷன் சேர்த்து கலக்கவும். இத்துடன் சிறிது தேன் சேர்த்து முகத்தில் பேக் போடவும். 20 நிமிடம் கழித்து கழுவுங்கள்.
வெள்ளரிக்காய் இயற்கையாகவே சருமத்திற்கு நிறத்தை அள்ளிக்கூடியது. வெள்ளரிக்காயை அப்படியே பேஸ்ட் செய்து முகத்தில் அப்ளை செய்யலாம்.
சுத்தமான காய்ச்சாத மாட்டுப்பால் ஒரு டீஸ்பூன் எடுத்து பஞ்சு கொண்டு நனைத்து முகத்திற்கு மசாஜ் செய்யுங்கள்.
தேனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பேக் போடலாம்.
உருளைக்கிழங்கு பேஸ்டை அப்படியே முகத்தில் தடவலாம். அத்துடன் சிறிது பால் சேர்த்தும் முகத்தில் பேக் போடலாம்.
தக்காளிச்சாறு ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். அத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்து கலந்து சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
இரவு தூங்குவதற்கு முன்னர் ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் மசாஜ் செய்யுங்கள்.
ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். இது சருமத்தில் உள்ள கருமைகளை நீக்குகிறது.
குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து நன்றாக ஊறியவுடன் அந்த கலவையை முகத்தில் பேக் போட்டு காய்ந்ததும் கழுவி விடுங்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டைவர்ஸ் கூட இத்தன தடவ பண்ணமாட்டாங்க : அப்டேட் குமாரு
சர்தார் 2 பூஜை நிகழ்ச்சி தேதி இதுதானா?
பிகார் ஆட்சி மாற்றம் : நிதிஷ்குமார் – தேஜஸ்வி சொல்வதென்ன?
Australia Open : சாம்பியன் பட்டம் வென்று இத்தாலி வீரர் சாதனை!