பிரான்ஸ் அதிபர் மெக்ரான் மற்றும் பிரதமர் மோடி உடன் நடிகர் மாதவன் எடுத்துகொண்ட ’செல்பி’ புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், ஜூலை 14 ஆம் தேதி இரவு அந்நாட்டில் உள்ள லுவர் அருங்காட்சியகத்தில் பிரான்ஸ் அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி உடனான இந்த விருந்தில் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அந்த வகையில், நடிகர் மாதவனும் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பின்னர், பிரான்ஸ் அதிபர் மெக்ரான், பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டின் முன்னாள் கால்பந்து வீரர் மேத்யூ பிளாமினி மற்றும் நடிகர் மாதவனுடன் ’செல்பி’ புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்த செல்பி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக , இந்த புகைப்படத்தை பகிர்ந்த மாதவன், ” பாரீசில் நடந்த பிரான்ஸ் தினக் கொண்டாட்டத்தின் போது, இந்தியா- பிரான்ஸ் உறவுக்கும், இரு நாட்டு மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற ஆர்வமும், அர்ப்பணிப்பும் தெளிவாக இருந்தது.
பிரதமர் நரேந்திர மோடியை கவுரவிக்கும் வகையில், அதிபர் மெக்ரானால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருந்து நிகழ்ச்சியில், இரு தலைவர்களும் இந்த நட்பு நாடுகளின் எதிர்காலத்திற்கான தங்கள் பார்வையை ஆர்வத்துடன் விவரித்தபோது நான் மிகவும் வியந்துபோனேன்.
அவர்களின் நேர்மறையான மற்றும் பரஸ்பர மரியாதை ஒரு அன்பான அரவணைப்பு போல இருந்தது. அவர்களின் பார்வையும் கனவுகளும் நம் அனைவருக்கும் விரும்பிய மற்றும் பொருத்தமான நேரத்தில் பலனளிக்க நான் மனதாரப் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியிருந்தார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தவறு செய்யவில்லை என்றால் பொன்முடி நிரூபிக்கட்டும்: ஜெயக்குமார்
அமைச்சர் பொன்முடி மற்றும் கெளதம சிகாமணி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: ஏன்?