ஹெல்த் டிப்ஸ்: டீ பிரியர்கள் கவனத்திற்கு.. டீ குடிக்கும் போது இவற்றை சேர்த்து சாப்பிட வேண்டாம்!

Published On:

| By Monisha

health tips do not take this food with tea

டீ இல்லாமல் இன்றைய நாள் ஓடாது என்ற சிந்தையுடன் பலரும் வாழ்ந்து வருகின்றனர். சிலருக்கு டீ உடன் திண்பண்டங்கள் சாப்பிடும் பழக்கம் இருக்கும். சில உணவுகள் மற்றும் பானங்களை டீயுடன் தவறுதலாக கூட உட்கொள்ளக்கூடாது.

தேநீர் அருந்துவதுடன், உங்கள் ஆரோக்கியத்தையும் (Health) நன்கு கவனித்துக் கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். டீயுடன் சாப்பிடக் கூடாதவற்றை பற்றி இங்கே காணலாம்.

1.எலுமிச்சை

பலர் எலுமிச்சை கலந்த தேநீர் அருந்துவார்கள். ஆனால் டீயையும் எலுமிச்சையையும் சேர்த்து குடிப்பது உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. தேநீரில் காஃபின் உள்ளது. இவை இரண்டும் சேரும் போது இரண்டின் விளைவுகளையும் இரண்டும் குறைக்கின்றன.

இது மட்டுமின்றி, தேயிலையில் காணப்படும் சுவடு கூறுகள் மற்றும் எலுமிச்சை அமிலம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம். இதனால் வயிற்றில் எரிச்சல் மற்றும் பிடிப்புகள் ஏற்படும்.

2.மஞ்சள் கலந்த பொருட்களை சாப்பிட வேண்டாம்

தேநீரில் காஃபின் உள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இது குடித்த பிறகு ஆற்றலை வழங்குகிறது. மறுபுறம், நீங்கள் தேநீருடன் மஞ்சள் கலந்த உணவை உட்கொண்டால், அது உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக்குகிறது. ஏனெனில் மஞ்சள் சூடான ஒரு பொருளாகும்.

அப்படிப்பட்ட நிலையில் டீயுடன் மஞ்சள் கலந்த ஏதாவது ஒன்றைச் சாப்பிட்டால் உடலில் சூடு அதிகரிக்கலாம். இதன் காரணமாக உங்களுக்கு வியர்வை அல்லது தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

மேலும் இதனால் உடலில் வாயுத் தொல்லையும் உருவாகி பிரச்சனை ஏற்படலாம்.

3.வறுத்த தின்பண்டங்கள்

மழைக்காலத்தில் மக்கள் டீ, பக்கோடா போன்றவற்றை அதிகம் விரும்புவார்கள். பெரும்பாலும் டீயுடன் பொரித்த உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள்.

ஆனால் பக்கோடா போன்ற டீப் ஃப்ரை செய்யப்பட்ட உணவுகள் தேநீருடன் சேர்த்து சாப்பிடும் போது தீங்கு விளைவிக்கும். பக்கோடாவில் உள்ள கடலை மாவு, ஊட்டச்சத்துக்கள் உடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது.

இதனால் வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சுபஸ்ரீ

கோவை பாலத்தின் மீது பாலஸ்தீனக் கொடி: மூவர் கைது!

வேலைவாய்ப்பு : TNUIFSL நிறுவனத்தில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment