ஆஸ்திரேலியாவில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சுமார் 2500பேர் ஆடைகளை கழற்றி நிர்வாணபுகைப்படம் எடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் மெலனோமா எனப்படும் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.
இது அந்நாட்டில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் நான்காவது புற்றுநோயாக உள்ளது.
இந்த ஆண்டு புதிய தோல் புற்றுநோய்கள் அந்நாட்டில் மட்டும் 17,756பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 1,281ஆஸ்திரேலியர்கள் இந்த நோயால் 2022ல் இறப்பார்கள் என்று ஆஸ்திரேலிய அரசு கணித்துள்ளது.
இதனையடுத்து தோல் புற்றுநோய் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அந்நாட்டு அரசும், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.
அதன் ஒரு முயற்சியாக புகைப்பட கலைஞர் ஸ்பென்சர் துனிக், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தோல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு சம்மதித்தார்.
அதன்படி இன்று காலையில் சிட்னி கடற்கரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக சுமார் 2500பேர் குவிந்தனர்.
பின்னர் அனைவரும் ஆடைகளை கழற்றி நிர்வாணமான நிலையில் புகைப்பட கலைஞர் துனிக்கிற்கு போஸ் கொடுத்தனர்.
இதுகுறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற லிண்ட்னர் என்பவர், “நேற்று இரவு வரை பயத்தில் இருந்தேன். எனினும் நல்ல நோக்கத்திற்காக இன்று நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் ஆர்வமுடன் பங்குகொண்டேன். இங்குவந்த அனைவருமே மரியாதைக்குரியவர்கள்
இது நோய்குறித்த மக்கள் சிந்திக்க நல்ல அதிர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
புகைப்பட கலைஞர் துனிக் கூறுகையில், “தோல் பரிசோதனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த எங்களுக்கு ஒருவாய்ப்பு கிடைத்தது. நான் இங்கு வந்து, எனது கலையின் மூலம் உடலையும், பாதுகாப்பையும் கொண்டாடுவதில் பெருமை அடைகிறேன்,” என்றார்.
வெகுஜன நிர்வாணபுகைப்படம் எடுப்பதில் அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த துனிக் புகழ்பெற்ற கலைஞர்.
முன்னதாக, 2010ம்ஆண்டு 5,200ஆஸ்திரேலியர்களை வைத்து சிட்னி ஓபரா ஹவுஸ் முன்பு இதுபோன்ற வெகுஜன நிர்வாண புகைப்படம் எடுத்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பிறந்தநாளில் அமைச்சர் பதவி?: உதயநிதி பதில்!
மின் இணைப்புடன் ஆதார் எண்: செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு!