ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் தமிழ் சீசன் 7 டைட்டில் வின்னர் யாரென்பது தற்போது தெரிய வந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
மொத்தம் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது விஷ்ணு, அர்ச்சனா, தினேஷ், மாயா மற்றும் மணி சந்திரா என 5 போட்டியாளர்கள் எஞ்சியுள்ளனர்.
இதில் நாம் முன்னரே கூறியபடி டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இரண்டாவது இடம் மணி சந்திராவுக்கும், 3-வது இடம் மாயாவுக்கும் கிடைத்துள்ளது.
நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை தினேஷ், விஷ்ணு விஜய் பிடித்துள்ளனர். இதுகுறித்த இன்று இரவு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கும் இறுதிப்போட்டியில் கமல் அறிவிப்பார்.
கடந்த சீசன்கள் போல இல்லாமல் இந்த சீசன் தொடங்கியது முதலே போட்டியாளர்கள், வைல்டு கார்டு போட்டியாளர்கள், வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்த விவரங்கள் உடனுக்குடன் வெளியாகி விட்டன.
இந்த சீசன் டல்லடிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகி விட்டது. அதோடு கடந்த சீசன்கள் போல, ரொம்ப உக்கிரமான சண்டைக்கோழிகள் என யாரும் பெரிதாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…