முதன்முறையாக ஆப்பிள் நிறுவனம் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி இமாலய சாதனை படைத்துள்ளது.
ஸ்மார்ட் போன்கள் உலகைப் பொறுத்தவரை முடிசூடா ராஜாவாக வலம் வந்தது சாம்சங் நிறுவனம். இதனால் தான் கடந்த 2௦1௦ தொடங்கி 2௦22-ம் ஆண்டு வரை, ஸ்மார்ட்போன் விற்பனையில் நம்பர் 1 இடத்தைத் தக்க வைத்திருந்தது.
தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சாம்சங் நிறுவனத்திற்கு பட்ஜெட், உத்தரவாதம் போன்ற தனித்த காரணங்களால் உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பின் ஸ்மார்ட்போன் விற்பனையில், சாம்சங் நிறுவனத்தை வீழ்த்தி ஆப்பிள் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
IDC என்னும் சர்வதேச தரவு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த தரவுகள் தற்போது தெரிய வந்துள்ளன.
அதன்படி கடந்த 2௦23-ம் ஆண்டு ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தின் 20.1% ஐபோன்கள் விற்பனையாகி உள்ளது.
அதே நேரம் 2023-ல் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் 19.4% சாம்சங் நிறுவன போன்கள் விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில் முதல் இடத்தை ஆப்பிள் நிறுவனமும், 2-வது இடத்தை சாம்சங் நிறுவனமும், 3-வது இடத்தை சியோமி(12.5%) நிறுவனமும் பிடித்துள்ளன.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…