போர்க் கால அடிப்படையில் அண்ணாத்த படப்பிடிப்பு

Published On:

| By Balaji

மே மாத இறுதிக்குள் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்துவிட வேண்டுமென சன் நிர்வாகம் கறாராக சொல்லிவிட்டது. லாக்டெளன் வந்துவிட்டால் மறுபடியும் ஒன்று கூடுவது கடினம் என யூனிட் உணர்ந்துவிட்டது.கொரோனா காரணமாக ‘அண்ணாத்த’ ஷூட்டிங் தொடர்ந்து பல தடங்கல்களைச் சந்தித்தது. 2020 டிசம்பரில் மீண்டும் தொடங்கிய ஷூட்டிங் ரஜினியின் உடல்நிலை காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 2021 தீபாவளிக்குப் படத்தை ரிலீஸ் செய்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சன் பிக்சர்ஸ் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி ஐதராபாத்தில் மீண்டும் ஷூட்டிங்கைத் தொடங்கியது.ரஜினியும் ஐதராபாத் போய் இறங்கிவிட்டார். ராமோஜிராவ் ஸ்டூடியோவில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக இடைவெளி இல்லாமல் ‘அண்ணாத்த’ ஷூட்டிங் நடந்துவருகிறது. தயாரிப்பு நிர்வாகிகள் வட்டாரத்தில் பேசியபோது

இன்னும் மூன்று வாரத்துக்குள் படத்தை முடித்துவிட வேண்டுமென சன் நிர்வாகம் சொல்லிவிட்டது. லாக்டெளன் வந்துவிட்டால் மறுபடியும் ஒன்று கூடுவது கடினம் என யூனிட் உணர்ந்துவிட்டது. நிலைமையை உணர்ந்து ரிகர்சல் நன்றாகப் பார்த்து முதல் டேக்கிலேயே ஓகே சொல்லும் படி நடிக்கச் செய்கிறார்கள்.ரஜினிகாந்தை யூனிட்டில் யாரும் தொட்டுப் பேசவோ, அவரோடு தனித்து உரையாடவோ அனுமதி இல்லை. முடிந்த மட்டும் அவரைத் தனியாக வைத்துப் பாதுகாக்கிறார்கள். இந்த இரண்டு வாரமும் எடுக்கிற எல்லா காட்சிகளிலும் ரஜினியுடனான காம்பினேஷன் காட்சிகள் உண்டு. அதனால் இந்த ஏற்பாடு. ரஜினிக்கு அவித்த காய்கறிகள், மிகவும் கொஞ்சமாக உப்பு சேர்த்துக் கொடுக்கிறார்கள். காலை மாலை இரு வேளையும் இட்லிதான். மதியம் மட்டும் கொஞ்சமாக அரிசி சாதம் சாப்பிடுவதாக கூறுகின்றனர் இறுதிக்கட்ட படப்பிடிப்பு என்பதால் நாயகி நயன்தாரா உள்ளிட்ட அனைத்து நடிகர் நடிகைகளும் ஹைதராபாத் ராமோஜிராவ் சினிமா நகரில் முகாமிட்டுள்ளனர்.

**-ராமானுஜம்**

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share