மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா, ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஜூன் 20-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். ஜூன் 22-ஆம் தேதி வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடிக்கு விருந்து அளித்தார். அந்த நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிதா அம்பானி, கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, இந்திரா நூயி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தொழில்நுட்ப நல்லுறவு கூட்டத்திலும் இவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில், மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா , முகேஷ் அம்பானி, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதுகுறித்து ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், “இதைத்தான் அவர்கள் வாஷிங்டன் தருணம் என அழைப்பார்கள் என்று நினைக்கிறேன். நேற்று நடைபெற்ற தொழில்நுட்ப நல்லுறவு கூட்டத்திற்கு பிறகு முகேஷ் அம்பானி, விருந்தா கபூர் மற்றும் நான் வர்த்தக துறை செயலாளருடன் உரையாடல் நடத்தினோம்.

பின்னர் மதிய உணவிற்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் பேருந்தை தவறவிட்டோம். உடனடியாக உபெர் வாகனத்தை அழைக்க முயன்றபோது விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்சை சந்தித்து அவருடன் செல்ஃபி எடுத்து கொண்டோம். உபெருக்கு பதிலாக விண்கலத்தில் சவாரி செய்ய முடியுமா என்று கேட்டோம்” என தனது அமெரிக்க அனுபவத்தை ஆனந்த் மகேந்திரா பகிர்ந்துள்ளார்.
செல்வம்
“டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக பாண்டியா பொறுப்பேற்க வேண்டும்” – ரவி சாஸ்திரி