உள்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் பணியிட மாற்றம்!

Published On:

| By Kavi

உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் மாற்றப்பட்டுள்ளார்.  புதிய உள்துறை செயலாளராக  தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2023 மே மாதம் அமுதா ஐஏஎஸ் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று  (ஜூலை 16) அவர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள், நீலகிரி , புதுகை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோரை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவைகள் பிரிவு இயக்குநர் சந்திரகலா ராணிப்பேட்டை ஆட்சியராகவும்,

நீலகிரி ஆட்சியர் அருணா, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகவும்,

ஈரோடு வணிக வரித்துறை இணை ஆணையர் லட்சுமி பவ்யா இடமாற்றம் செய்யப்பட்டு நீலகிரி மாவட்ட ஆட்சியராகவும்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த பிரியங்கா தஞ்சாவூர் ஆட்சியராகவும்

சிப்காட் நிர்வாக இயக்குநர் ஆகாஷ் நாகப்பட்டினம் ஆட்சியராகவும்,

சென்னை வணிக வரி இணை ஆணையர் ரத்தினசாமி, அரியலூர் ஆட்சியராகவும்,

நிதித்துறை துணை செயலாளர் சிபி ஆதித்யா செந்தில் குமார், கடலூர் ஆட்சியராகவும்,

தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராகவும்,

தொழில் மற்றும் வணிகத்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரிண்டிகி பச்சுவா பெரம்பலூர் ஆட்சியராகவும்,

நகராட்சி நிர்வாக இணை ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் கஹ்லோன், ராமநாதபுரம் ஆட்சியராகவும்,

பள்ளிக் கல்வித் துறை செயலாளர் குமரகுருபரன், சென்னை மாநகராட்சி ஆணையராகவும்,

சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளராகவும்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய சம்பவத்தின்போது ஆட்சியராக இருந்த ஷர்வன் குமார் ஜடாவத், நகர்புற மேம்பாட்டு வாரிய இணை செயலாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

காவிரி விவகாரம் : உச்ச நீதிமன்றத்தை நாட அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

நிலமோசடி வழக்கு : முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share