பாகிஸ்தான் தாக்குதல்… S-400 ‘சுதர்ஷன் சக்ரா’வை பயன்படுத்தி இந்தியா பதிலடி!

Published On:

| By Selvam

பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை பாகிஸ்தான் மீது தொடுத்துள்ளது இந்தியா. இதனால், பாகிஸ்தான், இந்தியா எல்லைகளில் போர்ப்பதற்றம் நீடிக்கிறது. All About The S-400 Defence System

இந்தநிலையில், நேற்று (மே 7) இரவு அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, பூஜ் உள்ளிட்ட பல இடங்களை பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்க முயன்றது.

இந்த தாக்குதலை, இந்திய விமானப்படை தடுத்து நிறுத்தி வெற்றிகரமாக செயலிழக்கச் செய்தது. இந்த தாக்குதலின் போது, வான்வழி அச்சுறுத்தல்களை தடுக்க பயன்படும் ஏவுகணை தடுப்பு கட்டமைப்பான S-400 ‘சுதர்ஷன் சக்ரா’வை முதல்முறையாக பயன்படுத்தியுள்ளது இந்திய விமானப்படை.

எஸ்-400 சுதர்ஷன் சக்ரா என்றால் என்ன?

சுதர்ஷன் சக்கரம் என்பது விஷ்ணுவின் கையில் சுழலும் ஒரு வட்ட வடிவமான சக்கரமாகும். இது விஷ்ணுவின் சக்தியை குறிக்கிறது.

S-400 ஏவுகணை என்பது உலகின் மிகவும் மேம்பட்ட நீண்ட தூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளில் ஒன்றாகும்.

இந்த S-400 ஏவுகணை ஆறு லாஞ்சர்கள், மேம்பட்ட ரேடார் மற்றும் ஒரு கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ரஷ்யாவிடமிருந்து ஐந்து S-400 ஏவுகணைகளை இந்தியா வாங்கியுள்ளது. அவற்றில் தற்போது மூன்று செயல்பாட்டில் உள்ளன. ரூ.35,000 கோடியில் இந்த ஏவுகணைகளை வாங்க, 2018-ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

S-400 ஏவுகணையால், 400 கிமீ வரையிலான வான்வழி அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து, கண்காணித்து, திருட்டுத்தனமான விமானங்கள், போர் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் கப்பல்களை துல்லியமாக தாக்க முடியும்.

S-400 சுதர்சன் சக்ராவின் வெற்றிகரமான பயன்பாடு இந்திய விமானப்படைக்கு கூடுதலாக வலுசேர்த்துள்ளது. All About The S-400 Defence System

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share