பொங்கல் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டி உள்ளன.
பொங்கல் திருநாளை முன்னிட்டு பன்னெடுங்காலமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை அவனியாபுரத்தில் கடந்த 15-ந் தேதியும் மதுரை பாலமேட்டில் நேற்று 16-ந் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிடுகிறார்.
காளைகள் சீறிப் பாய, மாடுபிடி வீரர்கள் அவற்றை தீரமுடன் அடக்க அலங்காநல்லூர் களைகட்டியிருக்கிறது.
