அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 120 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட ரூ.18 லட்சம் செலுத்தி விருப்ப மனு கொடுத்துள்ளார் ஆரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் ஜி.வி.கஜேந்திரன்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று டிசம்பர் 22-ந் தேதி விருப்ப மனு கொடுத்தவர்கள்:
- மயிலாப்பூர் அதிமுக மேற்கு பகுதி செயலாளர் ஜெ.விஜய் பாஸ்கர் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மனுத் தாக்கல்
- எடப்பாடி பழனிசாமி 120 தொகுதிகளில் போட்டியிட, ஒரு தொகுதிக்கு ரூ.15,000 வீதம் ரூ.18,00,000 கட்டி, ஆரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் ஜி.வி.கஜேந்திரன் விருப்ப மனு வழங்கினார்
- சிவகங்கை மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் எழுவங்கோட்டை செந்தில் சுப்பையா காரைக்குடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தந்தார்
- பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அமைப்பு செயலாளர் துரை செந்தில் விருப்ப மனுவை வழங்கினார்.
- ஆலங்குளம் மற்றும் தி.நகர் தொகுதியில் போட்டியிட, அதிமுக செய்தி தொடர்பாளர் ஜெமிலா விருப்ப மனு தாக்கல் செய்தார்.
- திருத்தணி தொகுதியில் போட்டியிட அதிமுக செய்தித்தொடர்பாளரும், வழக்கறிஞருமான சிவசங்கரி விருப்ப மனு அளித்தார்
- கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கே.எம்.எஸ். சிவகுமார் விருப்ப மனு வழங்கினார்
- பொன்னேரி, திரு.வி.க நகர் தொகுதிகளில் போட்டியிட மருத்துவ அணி செயலாளர் முன்னாள் எம்.பி. வேணுகோபால் விருப்ப மனு தந்தார்
- முன்னாள் அமைச்சரும் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி. இராமலிங்கம் ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனுவை வழங்கினார்
