ஜம்மு காஷ்மீரில் இதுவரை என்ன நடந்தது? – 1947 முதல் Timeline!

Published On:

| By Minnambalam Desk

After independence what happened

1947: இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்தியா என்ற பெருநிலப்பரப்பு இந்தியா (இந்துக்கள் பெரும்பான்மை), பாகிஸ்தான் (இஸ்லாமியர்கள் பெரும்பான்மை) என இரு தேசங்களாக பிளவுபடுத்தப்பட்டன. After independence what happened

1947: இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளுடன் இணையாமல் இருந்தது ஜம்மு காஷ்மீர் சமஸ்தானம். அப்போது பழங்குடிகளை ஏவிவிட்டு ஜம்மு காஷ்மீரை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சித்தது. பாகிஸ்தானின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு அஞ்சி, இந்தியாவுடன் இணைந்து கொள்வதாக ஜம்மு காஷ்மீர் மன்னராக இருந்த மகாராஜா ஹரிசிங் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து ஜம்மு காஷ்மீருக்காக இந்தியா- பாகிஸ்தான் இடையே முதலாவது யுத்தம் நடைபெற்றது.

. After independence what happened

1948: ஜம்மு காஷ்மீர் விவகாரம், ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்பப்பட்டது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் நடைமுறைமுக்கு வந்தது. ஆனாலும் பாகிஸ்தான், ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதிகளில் இருந்து விலக மறுத்தது.

இதனால் இந்தியாவிடம் ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் மற்றொரு பகுதியும் என இரண்டாக ஜம்மு காஷ்மீர் பிளவுபட்டது. இந்தியாவின் வடமேற்கில் ஜம்மு காஷ்மீரின் 222,200 சதுர கிலோ மீட்டர் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதுதான் ஆசாத் காஷ்மீர், கில்கிட், பல்டிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கியது. After independence what happened

1950: ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியை உருவாக்கிய ஷேக் அப்துல்லா, ஐநா தீர்மானத்தின் படி, ஜம்மு காஷ்மீர் மக்கள், இந்தியாவுடன் இணைந்து நீடித்த பகுதியாக இருப்பதா? அல்லது சுதந்திர ஜம்மு காஷ்மீர் நாடாக இருப்பதா? என்பது குறித்த பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார்.

. After independence what happened

ஆனால், இதனை இந்தியா விரும்பவில்லை. இதனால் ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டார். ஷேக் அப்துல்லா கைதுக்குப் பின்னர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு காஷ்மீர் இணைக்கப்பட்டு அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்தும் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு அந்தஸ்துதான் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி பிரதமர் மோடி அரசால் ரத்து செய்யப்பட்டது. After independence what happened

1960: ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதி நிலப்பரப்பை சீனாவும் ஆக்கிரமித்தது. இது அக்‌சய் சின் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நிலப்பரப்பை மீட்க இந்தியா – சீனா இடையே யுத்தம் நடைபெற்றது. இந்த யுத்தத்தில் இந்தியாவை சீனா தோற்கடித்தது. அதே கால கட்டத்தில் தமது ஆக்கிரமிப்பில் இருந்த காஷ்மீரின், கரகோரம் பகுதியையும் சீனாவுக்கு பாகிஸ்தான் தாரைவார்த்தது. After independence what happened

. After independence what happened

1970: கிழக்கு பாகிஸ்தான் விடுதலைக்காக இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. இந்தப் போரில் பாகிஸ்தான் பெரும் தோல்வி அடைந்தது. After independence what happened

கிழக்கு பாகிஸ்தான், வங்கதேசம் என்ற புதிய நாடாக பிறந்தது. இந்தப் போரின் முடிவில் சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த சிம்லா ஒப்பந்தம், ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதிகளை வரையறை செய்தது. (தற்போதைய பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு பதில் தரும் வகையில் சிம்லா ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக பாகிஸ்தானும் அறிவித்துள்ளது). 1970களின் இறுதியில் ஜம்மு காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அரசியல் ரீதியாகவும் இணைந்து செயல்பட தொடங்கியது. ஐநா தீர்மானத்தின் படி பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட முழக்கங்கள் நீர்த்துப் போயின.

1980: ஜம்மு காஷ்மீர் தனிநாடு விடுதலை முழக்கங்கள் எழுந்தன. இவை தேசிய இன சுயர்நிர்ணய உரிமை அடிப்படையிலும் எழுப்பப்பட்டன. பாகிஸ்தான் ஆதரவுடன் மத அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் தனிநாடு கோரிக்கையும் உருவானது. இந்த இரண்டும் ஆயுத கிளர்ச்சிகளாக உருவெடுத்தன. இந்த கால கட்டத்தில் இருந்துதான் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத குழுக்களும் பயங்கரவாத தாக்குதல்களும் பிறப்பெடுத்தன.

1990: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல்கள் அதிகரித்தன. அப்போதுதான் இந்தியாவின் கார்கில் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் யுத்தம் நடந்தது. இந்த கார்கில் போரில் இந்தியா வென்று தமது பகுதிகளை மீட்டது. After independence what happened

After independence what happened

2000-ம் ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளின் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி பல்வேறு தாக்குதல்களை நடத்துவதும் இதற்கு ராணுவம் பதிலடி தருவதுமான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றன. ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்துக்கு எதிரான பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. இதனால் ஜம்மு காஷ்மீரில் பதற்றம் நீடித்த ஒன்றாகவே இருந்து வந்தது. After independence what happened

2014-ம் ஆண்டுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் ராணுவம் மற்றும் பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு குழுக்கள், தாக்குதல் நடத்தினால் இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல்களை மேற்கொள்ளவும் தொடங்கியது. அதாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தீவிரவாத முகாம்களை அழிக்கும் துல்லிய தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்தியா. இன்றைக்கும் நடந்த ஆபரேஷன் சிந்தூரும் இதில் ஒன்றுதான்.

After independence what happened

2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலம், ஜம்மு காஷ்மீர்- லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் அனைத்துவிதமான அரசியல் நடவடிக்கைகளும் முடக்கப்பட்டன. அண்மையில்தான் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு மீண்டும் சட்டமன்றம் அமைந்தது.

2025: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதால் இந்தியா தற்போது பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு பாகிஸ்தானும் பதில் தருகிறது. இதனால் ஜம்மு காஷ்மீரை முன்வைத்து மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ச் சூழல் உருவாகி இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share