செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிமுக மனு!

Published On:

| By Monisha

admk petition against senthil balaji

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதற்கு எதிராக அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட பிறகு அவர் வகித்து வந்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமிக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடருவதற்கு எதிராக அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனும் முன்னாள் எம்.பியுமான ஜெயவர்த்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 22) மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “இலாகா மாற்றத்திற்குப் பிறகு செந்தில் பாலாஜியை அமைச்சராக ஆளுநர் அங்கீகரிக்கவில்லை. செந்தில் பாலாஜி மீது வழக்கு நிலுவையில் உள்ளது.

செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால், நீதிமன்றக் காவலில் இருக்கும்போது ரகசிய கோப்புகளை அணுக இயலும். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதால் மக்கள் வரிப்பணம் வீணாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

மோனிஷா

செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு!

அமலாக்கத் துறைக்கு என்.ஆர்.இளங்கோ நன்றி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share