கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு செல்லாது என்று 2022 ஆகஸ்ட் 17ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார்.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் காரசாரமான விவாதம் நடந்த நிலையில் இன்று (செப்டம்பர் 2) நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் , ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டியதில் தவறில்லை என்று தீர்ப்பு வழங்கினர்.
இந்த தீர்ப்பை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கொண்டாடி வரும் நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
தீர்ப்பு வெளியானதும் ஓ.பன்னீர் செல்வம் சொந்த ஊரான தேனியில் இருந்து சென்னை கிளம்பினார்.
அப்போது, தனது இல்லத்துக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்யப்படும்.
டெல்லி உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பாக முறையிடப்படும்” என்று தெரிவித்தார்.
பிரியா
பன்னீரின் எதிர்காலம் பூஜ்ஜியமாகிவிட்டது : ஜெயக்குமார் விமர்சனம்!