முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 என தொடர்ந்து ஹாரர் காமெடி படங்களை இயக்கி நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் நடன இயக்குனர், இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ்.
சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸின் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஒரு நடிகராக பல பாராட்டுகளையும், மிகப்பெரிய வெற்றியையும் அவருக்கு கொடுத்துள்ளது.
ஜிகர்தண்டா படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து பல இளம் இயக்குனர்களிடம் கதைகளை கேட்டு வருகிறார் ராகவா லாரன்ஸ்.
இந்நிலையில் லாரன்ஸ் அவர்களின் அடுத்த படம் குறித்து அயோத்தி பட இயக்குனர் மந்திர மூர்த்தியுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மந்திர மூர்த்தி – ராகவா லாரன்ஸ் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் இன்று நேற்று நாளை, அயலான் படத்தின் இயக்குனரான ரவிக்குமாரிடமும் புதிய படத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…