மயில்சாமி இறுதி ஊர்வலம் துவங்கியது!

Published On:

| By Selvam

நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் இன்று (பிப்ரவரி 20) துவங்கியது.

நடிகர் மயில்சாமி நேற்று (பிப்ரவரி 19) அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள மயில்சாமி இல்லத்தில் இருந்து அவரது உடல் வடபழனி மயானத்திற்கு இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளது.

இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் திரைக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். அபுசாலி சாலை, 80 அடி சாலை, ஆற்காடு சாலை வழியாக இறுதி ஊர்வலம் கொண்டு செல்லப்படுகிறது.

முன்னதாக இன்று காலை மயில்சாமி உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், பிரபு உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மயில்சாமியின் மறைவு திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் ப்ளூ டிக் கட்டணம்: கலாய்த்த எலான் மஸ்க்

‘ஆண்மை ஆராய்ச்சியாளர்’… எடப்பாடியை விமர்சித்த முரசொலி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share