விஜயகாந்துக்கு நடிகர் சங்க அஞ்சலி கூட்டம்: பிரேமலதா நேரில் வராத பின்னணி!

Published On:

| By Selvam

actor association vijayakanth condolence meeting premalatha not participate

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், நேற்று (ஜனவரி 19) சென்னை காமராஜர் அரங்கத்தில், நடைபெற்ற விஜயகாந்த் இரங்கல் கூட்டத்தில், பிரேமலதா நேரில் கலந்து கொள்ளாதது திரையரங்க வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி காலமானார். விஜயகாந்த் உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய் உள்ளிட்ட திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

இருப்பினும் பல நடிகர்கள் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தது.

இந்தநிலையில்,  ஜனவரி 19-ஆம் தேதி விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்படும் என்று நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி தெரிவித்திருந்தார்.

இந்த இரங்கல் கூட்டத்திற்கு பிரேமலதாவை அழைக்க வேண்டாம் என்று நடிகர் சங்கத்திலேயே சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

பிரேமலதா அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதால், அஞ்சலி கூட்டத்திலும் அரசியல் பேசிவிடுவாரோ? அதனால் அவரை அழைப்பதா, வேண்டாமா என்ற கருத்து பரிமாற்றங்கள் நடிகர் சங்க வட்டாரத்தில் எழுந்தது.

இதுகுறித்து, விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம்: பிரேமலதாவால் நடிகர் சங்கத்தில் பிளவா? என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் ஜனவரி 4-ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தநிலையில், நேற்று நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில், பிரேமலதா கலந்துகொள்ளவில்லை. விஜயகாந்தின் மகன்கள் பிரபாகரன், சண்முக பாண்டியன், எல்கே சுதீஷ் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். நினைவேந்தல் நிகழ்ச்சியில் பிரேமலதா பேசிய இரங்கல் வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

அந்த வீடியோவில், “கேப்டன் திரையுலகில் பல சவால்களை சந்தித்துள்ளார். தன்னுடைய கடின உழைப்பால் நடிகராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் ஆனார். அவருடைய படங்கள் மிகப்பெரிய வெற்றியும், தோல்வியும் அடைந்துள்ளது.

நடிகராக அனைத்து கிராம மக்களின் இடங்களிலும் நீங்கா இடம் பிடித்தவர் கேப்டன். திரைப்படத்தின் மூலம் மக்களிடம் நல்ல கருத்துக்களை கொண்டு சென்றவர். நடிகர் சங்க கட்டிடத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும்” என்று பிரேமலதா பேசினார்.

இந்த நினைவேந்தல் கூட்டத்தில், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர்கள் ராதாரவி, கமலஹாசன், வாகை சந்திரசேகர், ஜெயம்ரவி, பார்த்திபன் உள்ளிட்ட திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட அஞ்சலி கூட்டத்தில், பிரேமலதா விஜயகாந்த் நேரில் கலந்து கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

2036-ல் ஒலிம்பிக் போட்டி நடத்த முயற்சி: மோடி அறிவிப்பு!

ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்: விவாதிக்கப்போவது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share