10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களை சேமிப்பு/கால வைப்பு கணக்குகளைத் தாங்களாகவே திறந்து இயக்க அனுமதிக்கலாம் என்று வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. above 10 years of age are allowed
சிறுவர்களின் வைப்பு கணக்குகளைத் திறப்பது மற்றும் செயல்படுத்துவது குறித்த திருத்தப்பட்ட வழிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி நேற்று (ஏப்ரல் 21) வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், தங்களது வங்கிக் கணக்கை சுயமாக தாங்களே கையாள அனுமதிக்கப்படுகிறது. இது வங்கி சேமிப்பு கணக்கு மற்றும் டேர்ம் டெபாசிட் கணக்குகளுக்கு பொருந்தும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதன்மூலம் சிறுவர்கள் தன்னிச்சையாக வங்கிக் கணக்கை தொடங்க முடியும், வங்கியின் தனிப்பட்ட வரம்புக்கு உட்பட்டு குறிப்பிட்ட தொகை வரை தாங்களாகவே பரிவர்த்தனை செய்ய முடியும்.
இணைய வங்கி சேவை, ஏடிஎம் டெபிட் கார்டு, காசோலை ஆகியவற்றை வழங்குவது வங்கியின் விதிமுறைக்கு உட்பட்டது. சிறுவர்கள் தொடங்கும் இந்த வங்கிக் கணக்கில் இருப்புத் தொகை இருப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்று ஆர்.பி.ஐ அறிவுறுத்தியுள்ளது.
சிறுவர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்தவுடன், கணக்கு வைத்திருப்பவரின் கையொப்பத்தை பெற்று, வழக்கமான நடைமுறையை பின்பற்ற ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஜூலை மாதத்துக்குள் இந்த திருத்த வழிமுறைகளை பின்பற்றவும் உத்தரவிட்டுள்ளது.
10 வயதிற்கு குறைந்த வயதுடைய சிறுவர்கள், தாங்களாகவே வங்கி கணக்குகளைத் திறக்க முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
ஆர்.பி.ஐ-யின் இந்த நடவடிக்கை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள், பொருளாதாரத்தில் ஆர்வமுள்ள மாணவர்கள், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பண மேலாண்மை பழக்கவழக்கத்தை ஏற்படுத்த விரும்புபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. above 10 years of age are allowed