ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Published On:

| By Selvam

aam aadmi mp sanjay singh raid

ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (அக்டோபர் 4) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை பிப்ரவரி 26-ஆம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கெஜ்ரிவால் விளக்கம் கொடுத்தார்.

இந்தநிலையில் புதிய மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தி வருகிறார்கள்.

முன்னதாக சஞ்சய் சிங் உதவியாளர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையில் கிடைத்த ஆதாரங்களில் அடிப்படையிலேயே சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்வம்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

77%  நிரம்பிய சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share