தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையில் காலியாக உள்ள உதவி இயக்குநர், அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 130
பணியின் தன்மை: தோட்டக்கலை உதவி இயக்குநர்
வயது வரம்பு: 18-30 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: தோட்டக்கலையில் பி.எஸ்சி, எம்.எஸ்சி படித்திருக்க வேண்டும்.
கட்டணம்: பதிவு கட்டணமாக ரூ.150/- விண்ணப்பக் கட்டணமாக ரூ.200/- செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு.
கடைசித் தேதி: 27.12.2017.
மேலும் விவரங்களுக்கு http://tnpsc.gov.in/notifications/2017_29__not_horticultural.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
