aவிதிமுறை திருத்தத்தால் விலை உயரும்!

Published On:

| By Balaji

அரசின் புதிய விதிமுறைகளால் லாரிகளின் விலை 10 முதல் 15 விழுக்காடு உயரும் என்று தொழிற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

லாரிகளுக்கான அச்சு எடைத் திறனுக்கான புதிய விதிமுறைகளை அரசு அறிவித்துள்ள நிலையில், லாரிகளின் எஞ்சின்களை மட்டுமல்லாமல் டயர்கள், பிரேக்குகளையும் மாற்ற வேண்டிய நிலைமைக்கு லாரி உற்பத்தி நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. அதுபோக தற்போது இருக்கும் லாரி மாடல்களயும் திருத்தியமைக்க வேண்டும். மேலும் இந்த மாடல்கள் புதிதாக திருத்தியமைக்கப்பட்டவை என உறுதியளிக்கப்பட வேண்டும். இவற்றின் விளைவாக, புதிய விதிமுறைகள் அடுத்த 6 முதல் 8 மாதங்களில் நடைமுறைக்கு வந்தபின்னர் கனரக லாரிகளின் விலை 10 முதல் 15 விழுக்காடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து வோல்வோ ஐச்சர் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் பிரிவின் நிர்வாக இயக்குநரான வினோத் அகர்வால் *டி.என்.என்* ஊடகத்திடம் பேசுகையில், “தற்போது புதிய எடைத் திறன் விதிமுறைகளுக்கு ஏற்ப லாரி உற்பத்தி நிறுவனங்கள் மாற்றங்களை செய்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, 37 GVW (மொத்த வாகன எடை) கொண்ட ஒரு லாரிக்கு 180 hp (குதிரைத் திறன்) எஞ்சின் தேவைப்படும். ஆனால் இப்போது அதே லாரி 42.5 GVW எடையை சுமக்க வேண்டும். அதற்கு அந்த லாரிக்கு 230-250 hp திறன் கொண்ட எஞ்சின் தேவைப்படும். இதற்காக எஞ்சின்கள், டயர்கள் இரண்டுமே மாற்றப்படும். அதனால் நிச்சயமாக நுகர்வோருக்கான விலை அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share