_மோடிக்கு வாழ்த்து: முதல்வர் கடிதம்!

Published On:

| By Balaji

s

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்து, மூன்றாண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு எழுதிய வாழ்த்துக் கடிதத்தில் முதல்வர் கூறியதாவது, பிரதமராக மூன்று ஆண்டுகளை வெற்றிகரமாக முடித்ததற்கு, எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் தலைமையின் கீழ் இந்திய நாடு மாபெரும் சாதனைகளை செய்து வருகிறது. உங்களது திறமையான செயல்பாடு மற்றும் நிர்வாகம் காரணமாக பல்வேறு துறைகளில் நாடு வளர்ச்சி கண்டு வருகிறது.

மேலும், தமிழக அரசுக்கு தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஒத்துழைப்புக்கும், பேராதரவுக்கும் இந்நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் தாங்கள் பல்லாண்டு வாழ்வதற்கு இறைவன் உங்களுக்கு அருள் புரிய வேண்டுமென்று வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பாஜக ஆட்சியின் மூன்றாண்டு ஆட்சி மே 26ஆம் தேதி நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று முன்தினமே முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share