பிஜித் தீவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 பதிவு!

public

பசிபிக் கடலில் பிஜித் தீவுகள் அருகே உள்ள டோங்கா தீவில் இன்று (டிசம்பர் 09) கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆகப் பதிவாகியுள்ளது என்று புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹிகிபோ நகருக்குத் தென்கிழக்கு திசையில் 29 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம், உயிரிழப்பு, காயம் போன்ற எந்த விதத் தகவலும் வெளியாகவில்லை. அரசு, சுனாமி எச்சரிக்கையும் வெளியிடவில்லை. பூமி அதிர்ச்சியினால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

பசிபிக் கடலில் பிஜித் தீவு பூகம்ப அபாயப் பகுதியில் உள்ளது. இதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *