ADVERTISEMENT

இணைந்த `இரு இமயங்கள்’

Published On:

| By Balaji

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் `அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ’ படத்தில் வைரமுத்து எழுதிய பாடலை இசைஞானி இளையராஜா பாடியுள்ளார்.

1980இல் பாரதிராஜாவின் `நிழல்கள்’ படத்தில்தான் வைரமுத்துவும் இளையராஜாவும் இணைந்தனர். அப்படத்தில் இடம் பெற்ற `பொன்மாலை பொழுது’ பாடல் மூலமாக வைரமுத்து பாடலாசிரியராக அறிமுகமானார். அதன் பின்பு `அலைகள் ஓய்வதில்லை’, `காதல் ஓவியம்’, `மண்வாசனை’, `ஒரு கைதியின் டைரி’ போன்ற படங்களில் பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து ஆகிய மூவர் கூட்டணி இசைப் புரட்சி செய்தது.

ADVERTISEMENT

1985 இல் வெளிவந்த `முதல் மரியாதை’ திரைப்படம் தான் இளையராஜா – வைரமுத்து இடையே பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட காரணமானது. இதன் பின்னர் 1986 இல் வெளிவந்த `கடலோரக் கவிதைகள்’ படத்தில் மட்டுமே இணைந்து பணியாற்றியுள்ளனர். அதன் பின்பு இருவரும் இணையவில்லை.

ADVERTISEMENT

பாலாவின் `பரதேசி’ படத்தில் இருவரும் இணைகிறார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால் அது உண்மையாகவில்லை. அப்படத்தில் இடம்பெற்ற `செந்நீர்தானா செந்நீர்தானா’ பாடலை இளையராஜா பாடுவதாக இருந்தது. பின்னர் அவரின் தம்பியான கங்கைஅமரன் பாடினார். கடைசிவரை இருவரும் இணைய மாட்டார்களா? என ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது அதை உடைக்கும் விதமாக சிம்புவின் `அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ’ படத்தில் வைரமுத்துவும், இளையராஜாவும் இணைந்துள்ளனர். தர்மதுரை படத்திற்கு பிறகு யுவன்சங்கர் ராஜா இசையில் `ஏ ஏ ஏ’ படத்தில் வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். இப்படத்தில் ஒரு பாடலை இளையராஜா பாடியுள்ளார். 1986க்குப் பின் தற்போது 2017இல் தான் இருவரும் இணைந்துள்ளனர். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இருவரும் இணைந்துள்ளதால், மீண்டும் இளையராஜாவின் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதுவாரென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share