நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் தொடர்பான 75 சுவாரசிய தகவல்கள்:
- இயற் பெயர்: சிவாஜி ராவ் கெய்க்வாட்.
- பிறப்பு: டிசம்பர் 12, 1950, பெங்களூரு.
- தந்தை: ராமோஜி ராவ் கெய்க்வாட்
- தாய்: ரமாபாய் (ஜிஜாபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது).
- ஐந்து வயதில் தாயை இழந்தார்.
- சகோதரர்கள்: சத்தியநாராயணா ராவ் கெய்க்வாட், நாகேஷ் ராவ் கெய்க்வாட்.
- சகோதரி: அஸ்வத் பாலுபாய்.
- இனம்: மராத்தி குடும்பம்.
- தாய்மொழி: மராத்தி.
- பள்ளிப் படிப்பு: பெங்களூரு ஆச்சாரியா பாடசாலை, விவேகானந்த பாலக சங்கம்.
- பள்ளி நாட்களில் கிரிக்கெட், கூடைப்பந்து, கால்பந்து விளையாட்டுகளில் ஆர்வம்.
- ராமகிருஷ்ணா மடத்தில் இணைந்து வேதங்கள் மற்றும் சமஸ்கிருதம் பயின்றார்.
- 13, சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.
- பள்ளியில் மகாபாரத காவியத்தில் துரியோதனன் வேடமேற்று நடித்தார்.
- பெங்களூர் போக்குவரத்து கழகத்தில் பேருந்து நடத்துனராகப் பணியாற்றினார்.
- நடிப்புத் துறையில் சேரும் நோக்கத்துடன் சென்னைக்கு வந்தார்.
- நண்பர் ராஜ் பகதூர் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார்.
- 1975 இல் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.
- ஆரம்ப காலப் படங்களில் வில்லன் மற்றும் துணை வேடங்களில் நடித்தார்.
- 1976 இல் கே. பாலச்சந்தர் இயக்கிய “மூன்று முடிச்சு” திரைப்படம் அவரை ஒரு சிறந்த நடிகனாக அடையாளம் காட்டியது.
- “மூன்று முடிச்சு” படத்தில் சிகரெட்டை மேலே தூக்கிப் போட்டு வாயில் பிடிக்கும் ஸ்டைல் அவரது அடையாளங்களில் ஒன்று.
- 1976 இல் கே. பாலச்சந்தரின் “அந்துலேனி கதா” மூலம் தெலுங்கு அறிமுகம்.
- தெலுங்கில் “சிலக்கம்மா செப்பிந்தி” படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக நடித்தார்.
- “அவர்கள்”, “16 வயதினிலே”, “காயத்ரி” போன்ற படங்களில் வில்லனாக நடித்துப் பெரும் புகழ் பெற்றார்.
- “16 வயதினிலே” படத்தில் “பரட்டை” என்ற வில்லன் கதாபாத்திரம் இன்றும் பேசப்படும் ஒன்று.
- 1977 இல் “புவனா ஒரு கேள்விக்குறி” படத்தில் உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தில் நடித்துத் திரைப்பயணத்தில் திருப்புமுனை கண்டார்.
- “முள்ளும் மலரும்”.. வில்லன் மட்டுமல்ல, உணர்வுபூர்வமான கதாபாத்திரங்களிலும் அசத்துவார் என்பதை நிரூபித்தது.
- 1978 இல் எம். பாஸ்கர் இயக்கத்தில் வெளியான “பைரவி” படம் இவரை தனி கதாநாயகனாக நிலைநிறுத்தியது.
- “முள்ளும் மலரும்” படத்திற்காக 1978-79 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது பெற்றார்.
- 1979 இல் ஐ.வி. சசி இயக்கிய “அலாவுதீனும் அற்புத விளக்கும்” மூலம் மலையாள சினிமாவில் அறிமுகம்.
- 1980 இல் வெளியான “பில்லா” திரைப்படம் மிகப்பெரிய வணிகரீதியான வெற்றி, இதில் இரட்டை வேடம்.
- 1981 இல் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான நகைச்சுவைத் திரைப்படம் தில்லு முல்லு.
- 1981 பிப்ரவரி 26 அன்று லதா பார்த்தசாரதியை மணந்தார்.
- மகள்கள்: ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா.
- நடை, உடல்மொழி, தனித்துவமான ஸ்டைல் ஆகியவை அவரது அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது.
- தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் 170 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்.
- தமிழ் சினிமாவில் ரசிகர்கள் இவரை “சூப்பர் ஸ்டார்” என்று கொண்டாடுகின்றனர்.
- 1985 ஆம் ஆண்டு வெளியான “ஸ்ரீ ராகவேந்திரர்”. 100-வது திரைப்படம்.
- 1984 ஆம் ஆண்டு வெளியான “நல்லவனுக்கு நல்லவன்” படத்திற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது.
- 1984 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது.
- 1988 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க மர்ம சாகசத் திரைப்படமான “ப்ளட்ஸ்டோன்” படத்தில் நடித்து ஹாலிவுட்டிலும் தடம் பதித்தார்.
- “ப்ளட்ஸ்டோன்” படத்தில் பேசிய பிரபலமான வசனம் “மணி மணி மணி”:
- 1989 ஆம் ஆண்டு தமிழக அரசின் எம்.சி.ஆர் விருது.
- மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “தளபதி” (1991) ரஜினியின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்.
- “அண்ணாமலை” 1992-ல் வெளியானது.
- பாட்ஷா (1995) திரைப்படம் ரஜினியின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, புகழை மேலும் உயர்த்தியது.
- “முத்து” (1995) ஜப்பானில் பெரும் வரவேற்பைப் பெற்று, ஜப்பானிய ரசிகர்களைப் பெற்ற முதல் இந்திய நடிகர்.
- ஜப்பானில் “டான்சிங் மகாராஜா” என்ற பெயரில் அறியப்பட்டார்.
- “ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் முடிச்சான்” என்ற வசனம் மிகவும் பிரபலமானது.
- “அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை” என்ற படையப்பா வசனம் மிகப் பிரபலமானது.
- 2000 ஆம் ஆண்டில் இந்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவித்தது.
- சந்திரமுகி (2005) திரைப்படம் மிகப்பெரிய வணிகரீதியான வெற்றி.
- 2007 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான “சிவாஜி” திரைப்படத்திற்காக 26 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றார்.
- நடிகர் ஜாக்கி சானுக்கு அடுத்தபடியாக ஆசியாவிலேயே அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகர்.
- கருப்பு மற்றும் வெள்ளை, நிறம், 3D மற்றும் மோஷன் கேப்சர் என சினிமாவில் நான்கு வெவ்வேறு வடிவங்களில் தோன்றிய முதல் இந்திய நடிகர்.
- கோச்சடையான்: மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவான “கோச்சடையான்” (2014) படத்தில் நடித்தார்.
- 2016 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமை விருதான பத்ம விபூஷண் விருதைப் பெற்றார்.
- இந்திய திரைப்படத் துறையின் சிறந்த ஆளுமை: 45 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது.
- 2019 ஆம் ஆண்டிற்கான தலைசிறந்த நடிகருக்கான தாதாசாகெப் பால்கே விருது 2021 இல் அவருக்கு அறிவிக்கப்பட்டது.
- ரசிகர்கள் அழைக்கும் பெயர்கள்: “தலைவர்”, “சூப்பர் ஸ்டார்”
- “பாபா” மற்றும் “லிங்கா” போன்ற சில படங்கள் எதிர்பார்த்த வருவாயை ஈட்டாதபோது, தனது சொந்தப் பணத்திலிருந்து நஷ்ட ஈடு தொகையைத் திருப்பித் தந்துள்ளார்.
- நடிப்பு மட்டுமல்லாமல், ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர், இமயமலைக்குச் சென்று தியானம் செய்வது வழக்கம்.
- திரைப்படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடித்தாலும், நிஜ வாழ்க்கையில் புகை பிடிப்பதை ஊக்குவிப்பதில்லை.
- தனது எளிமையான வாழ்க்கை முறைக்காக அறியப்படுகிறார், எந்தவித பகட்டும் இல்லாமல் வாழ்கிறார்.
- வெளிப்படையான பேச்சு: தனது மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுபவர், அதனால் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் சந்தித்திருக்கிறார்.
- இசைஞானி இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவில், “வள்ளி” படப் பாடல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியது.
- ஒரு பட விளம்பர நிகழ்ச்சியில், தனது எனர்ஜிக்குக் காரணம் “பணம்” என்று நேர்மையாகக் கூறியது ரசிகர்களிடையே வைரலானது.
- மறைந்த பத்திரிகையாளர் சோ ராமசாமி மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார், இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
- அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தாலும், பின்னர் தனது உடல்நலக் காரணங்களால் அதிலிருந்து விலகினார்.
- படப்பிடிப்புத் தளங்களில் கூட, பயன்படுத்தப்பட்ட பொருட்களை வீணாக்காமல் மறுபயன்பாடு செய்ய ஊக்குவிப்பவர்.
- பொது மேடைகளிலும், பேட்டிகளிலும் தனது நகைச்சுவை உணர்வுடன் பேசுவார்.
- உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும், எண்ணற்ற ரசிகர் மன்றங்களையும் கொண்டவர்.
- ரசிகர்கள் அடிக்கடி இரத்த தானம் மற்றும் கண் தான முகாம்களை நடத்துகின்றனர், அவரது பிறந்தநாளில் அன்னதானம் செய்கின்றனர்.
- ரஜினியும் கமலும் இணைந்து நடித்த கடைசி திரைப்படம் “நினைத்தாலே இனிக்கும்” (1979).
- தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மூன்று ரசிகர்கள் விபத்தில் இறந்ததால், நகரப் பகுதிக்குள் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டார்.
