மதுபோதையில் பட்டியலின இளைஞர்களை தாக்கி நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்த ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் மணி மூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதியில் மனோஜ், மாரியப்பன் ஆகிய இரண்டு இளைஞர்கள் குளிக்க சென்றுள்ளனர்.
அவர்கள் குளித்துவிட்டு வீடு திரும்பியபோது அந்த பகுதியில் கஞ்சா போதையில் இருந்த 6 பேர் கொண்ட கும்பல் இளைஞர்களிடம் எந்த சாதி என்று கேட்டுள்ளனர்.
அவர்கள் தாங்கள் பட்டியல் சாதி என்று சொன்னவுடன் தங்களிடமிருந்த ஆயுதங்களுடன் இளைஞர்களை தாக்கி அவர்களிடமிருந்த செல்போன், ரூ.5000 பணம், ஏடிஎம் கார்டு ஆகியவற்றை பறித்துள்ளனர். மேலும் சாதி பெயரை சொல்லி திட்டியதோடு அவர்களை நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த இளைஞர்களின் பெற்றோர் அவர்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் காவல்துறை விசாரணை நடத்தி வந்தனர்.
காவல்துறை விசாரணையில் இளைஞர்களை தாக்கியது பொன்மணி (25), நல்லமுத்து (21), ஆயிரம் (19), ராமர் (22), சிவா (22), லட்சுமணன் (20) என்பது தெரியவந்தது. அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், வழிப்பறி கொள்ளை, ஆயுதங்களால் தாக்குதல், அவமானப்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவடத்தில் பட்டியலின மாணவர் சின்னத்துரையை அவருடன் பயின்ற சக மாணவர்கள் வெட்டிய சம்பவத்தின் அதிர்வலைகள் ஓய்வதற்குள் கஞ்சா போதையில் பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்சசியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செல்வம்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
பியூட்டி டிப்ஸ்: சருமப் பராமரிப்புக்கு உதவும் க்ரீன் டீ… பயன்படுத்துவது எப்படி?
ஹெல்த் டிப்ஸ்: குளிர்காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு எடுத்து கொள்ளவேண்டிய காய்கறிகள்!
டிஜிட்டல் திண்ணை: நம்மிடையே கறுப்பாடுகள்… அமைச்சரவைக் கூட்டத்தில் சீறிய ஸ்டாலின்