காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாகச் சென்னை உட்படத் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்து வருகிறது. நேற்று[அகஸ்ட்-17] இரவு சென்னையில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிகபட்சமாக 8 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வடதமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழகப் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.�,