மன்னார்குடி அருகே சோகம்: பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் மீது கார் மோதி 3 பேர் பலி!

Published On:

| By Pandeeswari Gurusamy

Accident

மன்னார்குடி அருகே காரக்கோட்டை பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில், பள்ளி மாணவர்கள் 3 பேர் காரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவர்கள் வழக்கம்போல் தங்களது வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

ADVERTISEMENT

அப்போது, பள்ளிக்கு அருகே அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த மாணவர்கள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் லோகேஷ், ரக்ஷித் உள்ளிட்ட 3 மாணவர்கள் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த மாணவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய நபர் குறித்தும், உயிரிழந்த மாணவர்கள் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share