தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவித்து நேற்று 1237 பேர் மனு அளித்துள்ளனர்.
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து நேற்று (டிசம்பர் 15) முதல் அதிமுக விருப்ப மனுக்களைப் பெற்று வருகிறது.

- தமிழகத்தில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு கட்டணம் ரூ15,000; புதுச்சேரி விருப்ப மனு கட்டணம் ரூ5,000
- முதல் நாளான நேற்று1,237 பேர் விருப்ப மனு அளித்தனர்.
- இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் என 349 பேர் விருப்ப மனு அளித்தனர்
- முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், காமராஜ் உள்ளிட்ட 888 பேர் தாங்கள் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
- தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள சிவி சண்முகம், விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார்.
- மாதவரம் தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி விருப்ப மனு கொடுத்தார்
- மதுராந்தகம், செய்யூர் தொகுதிகளில் போட்டியிட அதிமுக எம்.பி தனபால் மனைவி காயத்ரி தனபால் விருப்ப மனு அளித்தார்.
- வேளச்சேரி தொகுதியில் போட்டியிட வேளச்சேரி மேற்கு அதிமுக செயலாளர் எம்.ஏ. மூர்த்தி விருப்ப மனு கொடுத்தார்.
- வானூர், திண்டிவனம் தொகுதிகளில் போட்டியிட விழுப்புரம் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எஸ். கோகுல்ராஜ் மனு அளித்தார்.
- அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் முனைவர் வைகைச் செல்வன் விருப்ப மனு தந்தார்.
- காட்டுமன்னார்கோயில், திட்டக்குடி தொகுதிகளில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன் விருப்ப மனு கொடுத்தார்.
- திருமயம், அறந்தாங்கி தொகுதிகளில் போட்டியிட புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பிகே.வைரமுத்து விருப்ப மனு வழங்கினார்
- மதுரையில் 10 தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் எடப்பாடி போட்டியிட மருத்துவரணி இணைச் செயலாளர் பா.சரவணன் மனு கொடுத்தார். மதுரை வடக்கு, மதுரை மத்தி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தாம் போட்டியிட விருப்பம் தெரிவித்தும் அவர் மனு வழங்கினார்.
- நன்னிலம் தொகுதியில் மீண்டும் போட்டியிட முன்னாள் அமைச்சர் காமராஜ் விருப்ப மனு கொடுத்தார்.
