தமிழ்நாட்டில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் இரண்டு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா இன்று (செப்டம்பர் 12) பிறப்பித்துள்ள உத்தரவில்,
சென்னை கிழக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் இணை ஆணையர் திஷா மிட்டல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாம்பரம் காவல் ஆணையகரத்துக்கு உட்பட்ட பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் தீபா சத்யன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கத்துறை பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா திருநெல்வேலி நகர கிழக்கு காவல்துறை துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
சம்மனுக்கு ஆஜராகாத சீமான்… போலீசுக்கு சரமாரி கேள்விகள்!
மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை: அமைச்சர் துரைமுருகன் டார்கெட்!