ஸ்ரீபெரும்புதூர் அருகே நுங்கு பறிக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி இரண்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள திருமாங்காடு கிராமத்தில், டெல்லி கணேஷ் மற்றும் தட்சிணாமூர்த்தி என்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் பனை மரத்தில் நுங்கு பறிக்க முயன்றனர். அப்போது, இரும்புக் கம்பியைக் கொண்டு மின்மாற்றியில் சிக்கியிருந்த நுங்கை எடுக்க முயற்சித்தனர். இதில் மின்சாரம் தாக்கி இரு மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
