தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC மூலமாக 1,850 உதவியாளர்களை தேர்வு செய்ய மின்வாரியம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 400 உதவி பொறியாளர்கள், 1850 கள உதவியாளர்கள் TNPSC மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். TNPSC-ன் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப சேவைகள் தேர்வுகள் மூலமாக இப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
2023-ம் ஆண்டு முதல் மின்சார வாரியப் பணியிடங்கள் TNPSC தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற 258 உதவி பொறியாளர்கள் விரைவில் பணியில் சேர உள்ளனர்.
