தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 21) சுகாதார துறை மீதான விவாதத்தின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலுரை ஆற்றினார். 118 announcements on behalf of the Health Department
தொடர்ந்து துறை ரீதியாக 118 அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி,
1. பதிமூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் 500 புதிய முதுநிலை மருத்துவப் பட்ட மேற்படிப்பு இடங்கள் (PG Seats) உருவாக்கப்படும்.
2. ஐம்பது அரசு மருத்துவமனைகளில் ரூ.164.5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும்.
3. தமிழ்நாடு முழுவதும் 300 துணை சுகாதார நிலையக் கட்டடங்கள் ரூ.137.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
4. 60 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் ரூ.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
5. 50 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தேர்வு செய்து, டயாலிசிஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்.
6. தமிழ்நாட்டில் உள்ள 7,618 எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து, கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக மாதந்தோறும் ரூ.1000/- நிதி உதவி வழங்கப்படும்.
7. “முதலமைச்சரின் சிசு பாதுகாப்புப் பெட்டகம்” ரூ.8.07 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
8. மக்கள் தொகைக்கேற்ப 642 நகர மற்றும் கிராம துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.
9. உடல் உறுப்பு தானம் செய்யும் நபர்களின் தன்னலமற்ற பங்களிப்பினை அங்கீகரித்து, பாராட்டுவதற்காக அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கௌரவச் சுவர் (Wall of Honour) நிறுவப்படும்.
10. சட்டமன்ற உறுப்பினர்களுக்கான முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்படும்.
11. அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும். பராமரிப்பு டயாலிசிஸிக்கு உட்படும் அனைத்து நோயாளிகளுக்கும் புரதச்சத்து நிறைந்த உணவு வழங்கப்படும்.
12. 107அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் கட்டடங்கள் ரூ.80.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
13. மதுரை அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரிக்கு புதிய இடத்தில் ரூ.70 கோடி செலவில் கட்டடங்கள் கட்டப்படும்.
14. நான்கு அரசு மருத்துவமனைகளில் புதிய அதிநவீன PET சி.டி.ஸ்கேன் (PET CT Scan) சேவைகள் வழங்கப்படும்.
15. 84 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வட்டார பொது சுகாதார அலகுகளுக்கான புதிய கட்டடங்கள் ரூ.54.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்
16. 25 அரசு மருத்துவக் கல்லூரிகளின் விடுதிகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
17. இரண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு புற்றுநோய்க்கான லீனியர் அக்ஸிலேட்டர் (LINAC) மற்றும் சி.டி.சிமுலேட்டர் (C.T.Simulator) ரூ.54 கோடி செலவில் வழங்கப்படும்.
18. ஐந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புதிய அதிநவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் (MRI Scan) கருவிகள் ரூ.42.5 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
19. தமிழ்நாட்டில் ரூ.29.67 கோடி செலவில் மருத்துவ சாதனங்கள் (A மற்றும் B வகைகள்) சோதனைக் கூடம் கோயம்புத்தூரில் நிறுவப்படும்.
20. ஓமந்தூரார், தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் உதகமண்டலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இருதய உள்ளூடுருவி கதிரியக்க ஆய்வகங்கள் (Cathlab) ரூ.15 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
21. 87 புதிய அவசரகால ஊர்திகள் (BLS), 38 இலவச அமரர் ஊர்திகள், 38 புதிய உறைவிப்பான் பெட்டிகள் ஆகியன ரூ.26.71 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
22. பத்து அரசு மருத்துவமனைகளில் புதிய அதிநவீன சி.டி.ஸ்கேன் (CT Scan) கருவிகள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
23. அரசு மருத்துவமனைகளுக்கு “காயகல்ப் (Kayakalp)” திட்டத்தின் கீழ் விருது அளிக்கப்பட்டு ரூ.25 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
24. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மருத்துவக் கல்லூரிகளில் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையங்கள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
25. மதுரை இராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக் கட்டடத்தில் கூடுதலாக மூன்று தளங்கள் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
26. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 7 நாள் வண்ணக் குறியீடு கொண்ட படுக்கை விரிப்புகள் வழங்கப்படும்.
27. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவிற்கு 100 படுக்கைகள் கொண்ட கூடுதல் தளங்கள் ரூ.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
28. காரைக்குடி மற்றும் நாங்குநேரி அரசு மருத்துவமனைகளில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
29. திருவாரூர் மாவட்டம் – திருத்துறைப்பூண்டி, திருவண்ணாமலை மாவட்டம் – போளூரில் உள்ள ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு (CEmONC) மையங்களுக்கு மொத்தம் ரூ.12 கோடி மதிப்பீட்டில் தாய்சேய் நலப் பிரிவுகள் கட்டப்படும்.
30.கடலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள சுகாதார செவிலியருக்கான பயிற்சிப் பள்ளிக்கு புதிய விடுதிக் கட்டடம் ரூ.8.58 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
31. 24 அரசு மருத்துவமனைகளுக்கு புதிய டிஜிட்டல் ஊடுகதிர் (Digital X-ray) கருவிகள் ரூ.16.68 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
32. மக்களைத் தேடி ஆய்வக சேவைத் திட்டத்தின் கீழ், ரூ.15.43 கோடி மதிப்பீட்டில் உயர்தர ஆய்வக உபகரணங்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்.
33. உயர் மருத்துவ சேவைகள் வழங்க 862 மருத்துவ முகாம்கள் ரூ.12.78 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
34. தமிழ்நாட்டில் வளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க சோமாட்ரோகான் (Somatrogon) மருந்து ரூ.13.28 கோடி செலவில் வழங்கப்படும்.
35. மக்களைத் தேடி ஆய்வக சேவைத் திட்டத்தின் கீழ், அனைத்து அரசு ஆய்வகங்களுக்கும் தேவையான வேதிப்பொருட்கள் ரூ.252.66 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
36. அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, கோட்டார், நாகர்கோவிலில் 30 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு ரூ.11.40 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
37. நான்கு ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு (CEmONC) மையங்களுக்கு அவசரகால சிகிச்சைகளுக்கான மருத்துவ உபகரணங்கள் ரூ.10 கோடி செலவில் வழங்கப்படும்.
38. கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் கூடுதல் சிறப்பு மருத்துவப் பிரிவுகள்.
39. கணினிமயமாக்கப்பட்ட வசதிகளுடன் கூடிய ஊடுகதிர் (Computed Radiography X-ray) கருவிகள் 40 அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.8.91 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
40. சேலம் உணவுப் பகுப்பாய்வகத்தில் ரூ.8.73 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வகப் பிரிவு அமைக்கப்படும்.
41. அரசு மருத்துவமனைகளுக்கு நீராவி சலவை மற்றும் மத்திய நுண்கிருமி நீக்கும் நிலையங்கள் (CSSD) ரூ.18.25 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
42. தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் உள்ள விளையாட்டு மருத்துவம் மற்றும் ஆர்த்ரோஸ்கோபி துறை (Department of Sports Medicine and Arthroscopy), ரூ.7.77 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
43. தமிழ்நாட்டில் பச்சிளம் குழந்தை இறப்புகளைக் குறைப்பதற்காக 84 சிறப்பு பச்சிளம் குழந்தைப் பராமரிப்புப் பிரிவுகளுக்கு (SNCU) உயிர்காக்கும் அதிநவீன உபகரணங்கள் ரூ.7.49 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
44. ரூ.7 கோடி செலவில் புதிதாக 100 யோகா மற்றும் இயற்கை மருத்துவ நலவாழ்வு மையங்கள் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்படும்.
45. மக்களைத் தேடி ஆய்வக சேவைத் திட்டத்தின் கீழ், 400 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான ஆய்வக உபகரணங்கள் ரூ.7.28 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
46. 700ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச்சான்று (NQAS) பெறப்படும்.
47. எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய, 50 கையடக்க ஊடுகதிர் கருவிகள் (HAND-HELD X-RAY DEVICE) ரூ.6 கோடி செலவில் அனைத்து சுகாதார மாவட்டங்களுக்கும் (HUD) வழங்கப்படும்.
48. நான்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிநவீன மருந்தியல் பரிசோதனை ஆய்வகம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
49. பத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் உள்ள இந்திய மருத்துவமுறை பிரிவுகள் ரூ.5.55 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
50. மூன்று அரசு மருத்துவமனைகளில் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்னெடுப்பு (TAEI) மையங்கள் ரூ.5.27 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
51. 20 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயங்கி வரும் இந்தியமுறை மருத்துவப் பிரிவுகளுக்கு புதிய கட்டடங்கள் ரூ.4.66 கோடி செலவில் கட்டப்படும்.
52. திருநெல்வேலி – பாளையங்கோட்டை மற்றும் மதுரை உணவுப் பகுப்பாய்வகங்களில் ரூ.8.2 கோடி மதிப்பீட்டில் புதிய நுண்ணுயிரியல் ஆய்வகப் பிரிவுகள் அமைக்கப்படும்.
53. 108 வட்டாரங்களில் தீவிர தொழுநோய் கண்டறியும் முகாம்கள் ரூ.4.10 கோடி மதிப்பீட்டில் நடத்தப்படும்.
54. கடலூர், ஈரோடு, மன்னார்குடி, உடுமலைப்பேட்டை ஆகிய 4 அரசு மருத்துவமனைகளில் ரூ.4.00 கோடி செலவில் நவீன சமையல் கூடங்கள் அமைக்கப்படும்.
55. அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.3.90 கோடி செலவில் கூடுதல் தளம் கட்டப்படும்.
56. விபத்து மற்றும் அவசரகால சிகிச்சைகளை மேற்கொள்ள 10 அரசு மருத்துவமனைகளுக்கு சி-ஆர்ம் கருவிகள் ரூ.3.3 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
57. சிறுநீரக செயலிழப்பு தடுப்பு சிகிச்சைக்காக 50 ரத்த சுத்திகரிப்புக் (Hemodialysis) கருவிகள் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனைகளில் நிறுவப்படும்.
58. சென்னை – அரசு யுனானி மருத்துவக் கல்லூரியை மேம்படுத்த ரூ.3.15 கோடி செலவிடப்படும்.
59. பள்ளி மாணவர்கள் மூலம் ஒரு கோடி குடும்பங்களில் நோய்த் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாபெரும் திட்டம்.
60. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 25 புதிய சிறப்பு மருத்துவ புறநோயாளி சேவைகள் (Polyclinic) தொடங்கப்படும்.
61. நான்கு மாவட்டங்களில் உள்ள பச்சிளம் குழந்தைகள் நிலைப்படுத்துதல் பிரிவுகளை (NBSU) ரூ.2.5 கோடி செலவில் “சிறப்புப் பச்சிளம் குழந்தைப் பராமரிப்புப் பிரிவுகளாக“ (SNCU) மேம்படுத்தப்படும்.
62. அரசு மருத்துவமனைகளில் செயல்படும் 24 இரத்த வங்கிகளுக்கு கூடுதலாக இரத்தக் கூறு சேமிப்பு அலகுகள் ரூ.2.38 கோடி செலவில் வழங்கப்படும்.
63. தமிழ்நாட்டில் உள்ள 50 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.2.1 கோடி மதிப்பில் பல் ஊடுகதிர் (Dental X-ray) கருவிகள் வழங்கப்படும்.
64. பத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் குழந்தைகள் நலப் பிரிவு ரூ.2 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும்.
65. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் முழு நேர ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.2 கோடி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படும்.
66. இரண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், தாய் மற்றும் பச்சிளம் குழந்தைப் பராமரிப்புப் பிரிவுகள் (MNCU) ரூ.1.81 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
67. தமிழ்நாட்டில் வளரிளம் பருவத்தில் அதிகமாகக் கர்ப்பங்கள் நிகழும் 24 வட்டாரங்களில் தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
68. இந்தியமுறை மருத்துவப் பிரிவில் புதிதாக 20 இடங்களில் தசைக்கூட்டு குறைபாடு சிகிச்சை பிரிவு ரூ1.8 கோடி செலவில் உருவாக்கப்படும்.
69. கருவில் வளரும் சிசுக்களுக்கு ஏற்படும் பிறவிக் குறைபாடுகளை (Congenital Anomaly) மீயொலி பரிசோதனை மூலம் கண்டறிய ரூ.1.68 கோடி செலவில் அதிநவீன ஸ்கேன் கருவிகள் (Ultra Sound Machine) 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்.
70. குடும்ப நல சேவைகளை வலுப்படுத்துவதற்காக, “சுய பராமரிப்புப் பெட்டகங்கள்” 8,713 துணை சுகாதார மையங்கள் மற்றும் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் வைக்கப்படும்.
71. எலும்பு, மூட்டு, தசைநார் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆர்த்ரோஸ்கோப் கருவிகள் இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ.1.20 கோடி செலவில் வழங்கப்படும்.
72. தமிழ்நாடு முழுவதும் ஆரோக்கியம் மற்றும் காலநிலை மாற்றம் (One Health & Climate Change) பற்றிய தகவல் பரவல் ஏற்படுத்தப்படும்.
73. பதினொன்று புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் LED காட்சிப் பலகை ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
74. சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளுக்கு உபகரணங்கள் மற்றும் தளவாடங்கள் ரூ. 1.10 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும்.
75. ராணிப்பேட்டை மற்றும் ஆத்தூர் சுகாதார மாவட்டங்களில் தடுப்பூசிக் கிடங்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
76. உணவுப் பொருட்கள் குறித்த பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள “சமூக ஊடகப் பிரிவு” (Social Media Cell) உருவாக்கப்படும்.
77. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்குப் பதிலாக மறுசுழற்சி தன்மையுள்ள மக்கும் பொருள்களை உபயோகப்படுத்தும் உணவு நிறுவனங்களை ஊக்குவிக்க பரிசுகள் வழங்கப்படும்.
78. பிளாஸ்டிக் பாட்டில்கள் / கேன்களில் குடிநீரை சேகரித்து வைத்தல் மற்றும் பயன்பாடுகள் குறித்து உணவு வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
79. மருத்துவ ஆராய்ச்சியினை ஊக்குவிப்பதற்கான குறுகியகால மாணவர் திட்டத்தினை செயல்படுத்த உதவித் தொகையாக ஆண்டிற்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.
80. மலைவாழ் பகுதியில் காணப்படும் சிக்கிள் செல் மற்றும் தலசீமியா நோய்களைக் கண்டறிய ஏழு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு HPLC கருவிகள் வழங்கப்படும்.
81. ஆறு மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு மையங்களில் (DEIC) “ஒருங்கிணைந்த உணர்வுத்திறன் பூங்காக்கள்” அமைக்கப்படும்.
82. சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இரத்தச் சுத்திகரிப்பு (Hemodialysis) சேவைகளுக்கான மின்னணு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
83. பச்சிளம் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கிடைப்பதை உறுதிப்படுத்த ஆறு அரசு மருத்துவமனைகளில் பாலூட்டும் மேலாண்மை அலகு (LMU) நிறுவப்படும்.
84. கிருஷ்ணகிரி மற்றும் திருவாரூர் மாவட்ட மக்களுக்கு கண் சிகிச்சை சேவைகளை நேரடியாக வழங்குவதற்கு நடமாடும் கண் மருத்துவ சேவை வாகனங்கள் வழங்கப்படும்.
85. நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக, ஒருங்கிணைந்த நோய்கள் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் (IHIP-IDSP) சுகாதார நலப் பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.
86. புதிதாக 6 இடங்களில் இந்திய மருத்துவமுறை பழங்குடி நடமாடும் மருத்துவப் பிரிவுகள் தோற்றுவிக்கப்படும்.
87. காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், டிஜிட்டல் ஊடுகதிர் கருவியைக் கொண்டுள்ள நடமாடும் வாகனங்களில் “செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்” (AI-Technology) நிறுவப்படும்.
88. இருதயக் கோளாறு உள்ள கர்ப்பிணித் தாய்மார்களைக் கண்டறிந்து சிகிச்சை அளித்திட 5 ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு (CEmONC) மையங்களுக்கு எக்கோ (Echo) கருவிகள் வழங்கப்படும்.
89. எட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிநவீன மருத்துவ நோய் பரவியியல் பிரிவுகள் நிறுவப்படும்.
90. மயிலாடுதுறையில் மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு மையம் (District Early Intervention Centre) அமைக்கப்படும்.
91. கருவுறுதலுக்கு முன் மற்றும் பிறப்பிற்கு முந்தைய கருவின் தன்மையறியும் தொழில்நுட்ப முறைகள் (பாலின தேர்வை தடை செய்தல்) சட்டம், 1994 செயல் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்கள் நடத்தப்படும்.
92. சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முழுமையான பல் நல பரிசோதனை (Master Dental Health Check Up) பிரிவு தொடங்கப்படும்.
93. நான்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தமிழ்நாடு மருத்துவத்தர மேம்பாட்டுக் கட்டமைப்பு பயிற்சித் (TAN-QuEST) திட்டம் விரிவுபடுத்தப்படும்.
94. மலைவாழ் பகுதியில் சிக்கிள்செல் மற்றும் தலசீமியா மரபணு சாத்தியக்கூறு (Trait) மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்க 14 மரபணு சார்ந்த ஆலோசகர்கள் நியமிக்கப்படுவர்.
95. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் எதிர்கால தேவைக்கான மனிதவள மேலாண்மைத் தொலைநோக்குத் திட்டம் (Human Resources for Health Strategy) உருவாக்கப்படும்.
96. திருச்சிராப்பள்ளி மாவட்டம் சோமரசம்பேட்டையில் இயங்கிவரும் சித்த மருந்தகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும்.
97. வளரிளம் பருவத்தினருக்கு ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் திறன் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
98. நீடித்த நுரையீரல் அடைப்பு நோய்களுக்கான (COPD) விழிப்புணர்வு மற்றும் ஆரம்ப கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
99. கொழுப்புமிகு ஈரல் நோய் (Metabolic Dysfunction associated Steatotic Liver Disease-Previously NAFLD) குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் ஆரம்ப நிலை பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
100. ஹீமோபிலியா நோயாளிகளுக்கான மாநில அளவிலான இணைய பதிவேடு உருவாக்கப்படும்.
101. தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தான இணைய முகமை உருவாக்கப்படும்.
102. நான்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், ஒருங்கிணைந்த சுகாதார நிபுணத்துவப் பயிற்சி மையங்கள் (IHPTC) நிறுவப்படும்.
103. பத்து அரசு மருத்துவமனைகளுக்கு இ.சி.ஜி. (ECG) கருவிகள் வழங்கப்படும்.
104. “நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் கூடுதலாக நடைப்பயிற்சித் தடங்கள் ஏற்படுத்தப்படும்.
105. மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் வைர விழா கொண்டாடப்படும்.
106. தமிழ்நாடு நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் மேற்பார்வை வழிகாட்டு நெறிமுறைகள் விரிவாக்கம் செய்யப்படும். 118 announcements on behalf of the Health Department
107. ஒருங்கிணைந்த அடுக்குமாடி புதிய நிருவாகக் கட்டடம் அமைக்கப்படும்.
108. 500நகர்ப்புற சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களுக்கு தடுப்பூசி சேவைகள் விரிவாக்கம் செய்யப்படும்.
109. தற்போது 15 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசித் திட்டம் மேலும் 5 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்தப்படும்.
110. நான்காவது பொது சுகாதார சர்வதேச மாநாடு (DPHICON) நடத்தப்படும்.
111. சிறு வணிக நிறுவனத் தொழிலாளர்களைத் தேடி ‘பணியிடம் சார்ந்த தொற்றா நோய்களுக்கான’ பரிசோதனைகள் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்படும்.
112. நான்கு மண்டல மருத்துவக் கல்வி தொழில்நுட்பக் கருத்தரங்குகள் நடத்தப்படும்.
113. உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
114. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கட்டணமின்றி எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்புப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
115. ஐம்பது கல்லூரிகளில் புதிய செஞ்சுருள் சங்கங்கள் (Red Ribbon Clubs), தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தால் ஏற்படுத்தப்படும்.
116. வாழ்வியல் திறன் கல்விப் பயிற்சி வாயிலாக பள்ளியில் பயிலும் வளரிளம் பருவத்தினரிடையே எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மேலும் 100 பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்படும்.
117. தமிழ்நாட்டில் போதைத் தரக்கூடிய மருந்துகளின் நடமாட்டத்தை கண்காணிக்க பறக்கும் படைகள் உருவாக்கப்படும்.
118. தரச் சான்றிதழ்களின் அடிப்படையில், உணவு வணிகர்களைத் தேர்வு செய்வது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 118 announcements on behalf of the Health Department