10% இட ஒதுக்கீடு: மௌனம் கலைத்த ஓபிஎஸ்

Published On:

| By Kalai

10% இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காத நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி வகுப்பினருக்கான 10 சதவீத ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்ப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

ஆனால் இதில் அதிமுக தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. இந்த விஷயத்தில் அவர்களது நிலைப்பாடு என்னவென்றும் தெரியவில்லை.

இந்தநிலையில் இன்று(நவம்பர் 14)மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வத்திடம் 10% இட ஒதுக்கீடு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு சார்பில் மேல் முறையீடு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, ஒ.பன்னீர்செல்வத்திடம் பேசவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சொல்லி வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, “பிரதமர் மோடியை மதுரை விமான நிலையத்தில் சந்தித்தபோது உண்மையில் நடந்தது என்ன என்பது என்னுடன் இருந்த எம்.எல்.ஏ ஐயப்பனுக்கு தெரியும்.

எங்களது ஆதரவாளர்கள் யாரும் மனவருத்தத்தில் இல்லை, மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள். பிரதமர் மோடியையும்,   அமித்ஷாவையும் சந்தித்தது திருப்திகரமாக இருந்தது” என்றார்.

கலை.ரா

மக்கள் படகில் செல்வதை ஸ்டாலின் பார்க்கவில்லையா?: களத்தில் எடப்பாடி

கொடநாடு வழக்கு: சசிகலாவிடம் 30 மணி நேரம் விசாரணை, 280 கேள்விகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share