வைகோவுடன் சிங்களர்கள் தகராறு: ஸ்டாலின் கண்டனம்!

Published On:

| By Balaji

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் நேற்று (செப்டம்பர் 25) சிங்களர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளதை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் நேற்று (செப்டம்பர் 25) நடைபெற்ற அமர்வில், மதிமுக பொதுச் செயலாளர்[வைகோவுடன் சிங்களர்கள் தகராறில்]( https://minnambalam.com/k/2017/09/26/1506364213) ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ட்விட்டரில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: “ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை பற்றிப் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சிங்களர்கள் சிலர் சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றதற்கு, திமுக சார்பில் எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவிலிருந்து சென்ற ஒரு தமிழரின் மனித உரிமைக்கு எதிராக மனித உரிமைக் கவுன்சிலுக்கு உள்ளேயே சிங்களர்கள் சிலர் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டிருப்பது கவலையளிக்கிறது. இது குறித்து, மத்திய அரசு உடனடியாகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share