தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் மீண்டும் விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 1,058
பணியின் தன்மை: விரிவுரையாளர்கள் (Engineering / Non Engineering)
வயது வரம்பு: 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.600/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.300/-
கடைசித் தேதி: 11.08.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 16.09.2017
மேலும் விவரங்களுக்கு http://trb.tn.nic.in/POL2017/28072017/Notification-Tamil.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
