8வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகவே இரண்டு மாணவர்கள் வகுப்புக்கு வெளியே இருப்பது போன்ற வீடியோ ஒன்று வைரலாகப் பரவி வந்தது. இதில், ஒரு சிறுவன் நிர்வாண நிலையிலும், மற்றொரு சிறுவன் சட்டை மட்டும் அணிந்தநிலையில் அரை நிர்வாணமாக நிற்பதுபோலவும் இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சில தனியார் சமூக சேவை அமைப்புகள் மகாராஷ்டிர மாநில காவல்துறையிடம் இதுகுறித்து புகாரளித்தனர். இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இந்தச் சம்பவம் மும்பை மலாடு மேற்கு மால்வாணி கேட் பகுதியில் உள்ள தனியார் பயிற்சி வகுப்பில் நடந்தது தெரியவந்தது. உடனடியாக, சம்பந்தப்பட்ட பயிற்சி வகுப்புக்கு விரைந்த போலீசார், அங்கு இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், வீட்டுப் பாடத்தை எழுதாததால் வீடியோவில் காணப்பட்ட அந்த 2 சிறுவர்களையும் தண்டிப்பதற்காக கணேஷ்நாயர், சரோஜ் ஜெய்ஸ்வாஸ் ஆகிய இரு ஆசிரியர்கள் அவர்களை வகுப்புக்கு வெளியே நிர்வாணமாக நிற்கவைத்தது உறுதியானது. இதையடுத்து, அந்த இரண்டு ஆசிரியர்கள்மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.�,
மாணவர்களை நிர்வாணமாக்கி தண்டனை: ஆசிரியர்கள்மீது வழக்குப்பதிவு
Published On:
| By Balaji

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel